செய்திகள் :

`கோவை MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?'- காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

post image

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

MyV3Ads நிறுவனம்

அவர்கள் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி நாடு முழுவதும் பல லட்சக்கணக்கானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். குறுகிய காலத்திலேயே அந்த நிறுவனத்தின் மீது அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து கோவை காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். மோசடி தொகை அதிகம் இருக்கும் என்பதாலும், முதலீட்டாளர்கள் மாநிலம் முழுவதும் இருப்பதாலும் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

MyV3Ads சக்தி ஆனந்தன்

நிறுவனத்தின் உரிமையாளர்கள் விஜய ராகவன் மற்றும் சக்தி ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிறகு அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். ஆனாலும் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் சென்று  சேரவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.

இந்நிலையில் கோவை பொருளாதார குற்றபிரிவு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “Myv3ads நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. இதுதவிர  கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இயங்கி வந்தது. மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

தமிழக காவல்துறை

முதலீடு செய்து ஏமாந்தவர்கள் காலம் தாமதிக்காமல் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புகார் அளிக்கலாம். இதேபோல அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூறியுள்ளனர்.

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் கண்... மேலும் பார்க்க

கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், டாக்டர் மூா்த்தி சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (63). இவர் கடந்த ஜனவரி 8ம் தேதி, தனது மகனைச் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காகக் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு குடும்பத்துடன் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்க... மேலும் பார்க்க

மதுரை: கலெக்டர், காவல்துறையினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் திருட்டு; போலீஸ் தீவிர விசாரணை

கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலுள்ள கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் விசாரணைமதுரை ரேஸ்கோர்ஸ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க