செய்திகள் :

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான ஞானசேகரன் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து பெற்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், முதல் தகவல் அறிக்கை வெளியானது எப்படி என விசாரித்து வருகின்றனர்.

ஞானசேகரன்

அதே நேரத்தில் கைதான ஞானசேகரன், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சமயத்தில் போனில் 'சார்' எனப் பேசியதாகத் தகவல் வெளியானது. அந்த சார் யார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வரும் வேளையில் ஞானசேகரனைக் காவலில் எடுத்தும் விசாரித்த போலீஸாருக்குப் புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இதுகுறித்து ஞானசேகரனை விசாரிக்கும் போலீஸாரிடம் பேசினோம்

``கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் கோட்டூர்புரம் காவல் நிலைய சரித்திர ரௌடிகள் பட்டியலில் ஞானசேகரனின் பெயரும் இடம்பிடித்திருந்தது. ஒவ்வொரு குற்ற வழக்குகளிலும் ஞானசேகரன் சிறையில் அடைக்கப்படும்போது அவரை ஜாமீனில் எடுக்கத் தனியாக வழக்கறிஞர்கள் குழுவினர் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். அந்தளவுக்குச் செல்வாக்குடன் செயல்பட்ட ஞானசேகரன், பெரும்பாலும் பங்களா டைப் வீடுகளைக் குறி வைத்துத் திருடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பள்ளிக்காரணை பகுதியில் உள்ள பங்களா டைப் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்தன. அதுதொடர்பாக காவல் நிலையங்களில் புகார்களும் வந்திருக்கின்றன.

ஞானசேகரன்

இந்தச் சூழலில்தான் சிறையிலிருந்த ஞானசேகரனைச் சில தினங்களுக்கு முன்பு காவலில் எடுத்து விசாரித்தோம். அப்போது அவர் கார், வீடு என வசதியாக வாழ்ந்தது எப்படி எனக் கேள்வி கேட்டபோது, பள்ளிக்காரணை பகுதியில் காரில் சென்று திருடியதாகத் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின்படி ஏற்கெனவே பதிவான 7 வழக்குகளில் ஞானசேகரனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த வீடுகளில் ஞானசேகரன் திருடிய பொருள்களின் விவரங்களையும், அதை யாரிடம் கொடுத்தார் போன்ற தகவல்களையும் சேகரித்து வருகிறோம். அதனால் அந்த ஏழு திருட்டு சம்பவங்களில் குற்றவாளியாக ஞானசேகரன் சேர்க்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், டாக்டர் மூா்த்தி சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (63). இவர் கடந்த ஜனவரி 8ம் தேதி, தனது மகனைச் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காகக் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு குடும்பத்துடன் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்க... மேலும் பார்க்க

மதுரை: கலெக்டர், காவல்துறையினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் திருட்டு; போலீஸ் தீவிர விசாரணை

கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலுள்ள கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் விசாரணைமதுரை ரேஸ்கோர்ஸ... மேலும் பார்க்க

`கோவை MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?'- காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க