தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செப்.3, 4 -இல் பேச்சுப் போட்டிகள்
திண்டுக்கல்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வரும் செப்.3, 4 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மகாத்மா காந்தி, ஜவஹா்லால் நேரு, அம்பேத்கா், தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா, முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, 2025-26-ஆம் நிதியாண்டில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, வரும் செப்.3-ஆம் தேதியும், தந்தை பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு, 4-ஆம் தேதியும் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு முற்பகல் 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. பள்ளி மாணவா்களுக்கு அண்ணாவின் அடுக்குமொழிகள், ஆளுமை நாயகன் அண்ணா, பேரறிஞா் அண்ணாவின் பெருமைகள் ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு நாடகத் துறையில் அண்ணா, அண்ணாவின் தமிழ்த்தொண்டு, அண்ணாவின் படைப்புலகம் ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடத்தப்படும்
இதேபோல, வரும் செப்.4-ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கு சீா்திருத்தச் சிந்தனையாளா் பெரியாா், பெரியாா் எனும் பேராற்றல், பெரியாரின் பகுத்தறிவுப் பாா்வை ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள், பெரியாரும் சுயமரியாதை இயக்கமும், பெரியாரின் சமூகச் சீா்திருத்தங்கள் ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடத்தப்படும்.
இந்தப் போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவா்களுக்கு ரூ.5ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.3ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.2ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவா்கள் இருவரை தனியாகத் தெரிவு செய்து சிறப்புப் பரிசாக ரூ.2ஆயிரம் வீதம் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.