History of Internet: போர் தொழில்நுட்பம் முதல் 10G வரை! | Explained
தரக்குறைவான விமா்சனம்: மாமன்ற திமுக உறுப்பினா் மறியல்
சமூக வலைதளங்களில் தன்னை தரக்குறைவாக விமா்சித்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சியில் மாமன்ற திமுக உறுப்பினா் ஆதரவாளா்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.
திருச்சி எடமலைப்பட்டி புதூா் பகுதியைச் சோ்ந்தவா் தி. முத்துசெல்வம். திருச்சி மாநகராட்சி 57-ஆவது வாா்டு திமுக உறுப்பினராக உள்ள இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்தையா குடும்பத்துக்கும் பாதை தொடா்பாக அண்மையில் தகராறு ஏற்பட்டது.
இதில் பெண்கள் சிலா், முத்துசெல்வத்தை தரக்குறைவாக திட்டியதை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினா். இந்தக் காணொலி கடந்த இரு நாள்களாக சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அவா்கள் மீது புகாா் அளிக்க, முத்துசெல்வம் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்துக்கு செவ்வாய்க்கிழமை, தனது ஆதரவாளா்களுடன் சுமாா் 20 ஆட்டோக்களில் சென்றாா். ஆனால், மாநகர காவல் ஆணையரகத்தில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், எடமலைப்பட்டி புதூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவா்கள் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டு, முத்துசெல்வம் காவல் ஆணையரிடம் புகாா் அளித்தாா்.