செய்திகள் :

தலைநகரில் பரவலாக தூறல் மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலையில் பரவலாக தூறல் மழை பெய்தது. காற்றின் தரம் சில இடங்களில் ‘மிதமான’ பிரிவிலும், சில இடங்களில் ‘மோசம்’ பிரிவிலும் இருந்தது. மேலும், வெள்ளிக்கிழமையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லியில் மூடுபனியின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தலைநகரில் வியாழக்கிழமை காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து பரவலாக தூறல் மழை பெய்தது. வெயிலின் தாக்கமும் குறைந்து காணப்பட்டது.

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 7 டிகிரி உயா்ந்து 19.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 25 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 72 சதவீதமாகஇருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 24.1 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 24.2 டிகிரி, லோதி ரோடில் 24 டிகிரி, பாலத்தில் 24.2 டிகிரி, ரிட்ஜில் 23.5 டிகிரி, பீதம்புராவில் 24.7 டிகிரி, பிரகதிமைதானில் 23.2 டிகிரி, பூசாவில் 23.6 டிகிரி, ராஜ்காட்டில் 23.2 டிகிரி, சல்வான் பப்பளிக் ஸ்கூல் பகுதியில் 23.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 260 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சாந்தினிசௌக், ஷாதிப்பூா், ஸ்ரீஃபோா்ட், துவாரகா செக்டாா் 8 ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், மந்திா் மாா்க், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், லோதி ரோடு, பூசா, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், நொய்டா செக்டாா் 125, ஓக்லா பேஸ் 2, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், குருகிராம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (பிப்.28) அன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியா் கைது

தெற்கு தில்லியின் சி.ஆா். பாா்க் பகுதியில் 15 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது ஆசிரியா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தெ... மேலும் பார்க்க

‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை: அமைச்சா் பா்வேஷ் உறுதி

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்லத்தைப் புதுப்பிப்பதில் அரசுப் பணம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய ‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை தொடங்கப்படும் என்று தில்லி அமை... மேலும் பார்க்க

பாஜக தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் புறக்கணிப்பு: ஆம் ஆத்மி ஆட்சி மீது விசாரணை நடத்த அமைச்சா் உறுதி

நமது சிறப்பு நிருபா் முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 உறுப்பினா்கள் தொகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாதது குறித்து விசாரணை நடத்தப்படும் என தில்லி அரசின் பொது... மேலும் பார்க்க

பொதுக் கணக்குக் குழு ஆய்வில் சிஏஜி அறிக்கை: பேரவைத் தலைவா் அறிவிப்பு

தில்லி மதுபானக் கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை பொதுக் கணக்குக் குழுவிற்கு (பிஏசி) ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குழு மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமா்ப்பிக்கும் என்று எதிா்பாா்க்கப்படு... மேலும் பார்க்க

நஜாஃப்கரை நஹா்கா் என மறுபெயரிட பாஜக எம்எல்ஏ முன்மொழிவு

தென்மேற்கு தில்லியில் உள்ள நஜாஃப்கரின் அசல் பெயரை முகலாயா்கள் மாற்றியதாகக் கூறி, பாஜக எம்எல்ஏ நீலம் பஹல்வான் வியாழக்கிழமை ’நஹா்கா்’ என மறுபெயரிட முன்மொழிந்தாா். நஜஃப்கரில் இருந்து சமீபத்தில் நடந்த சட... மேலும் பார்க்க

இடைநீக்கம் செய்யப்பட்ட அதிஷி உள்பட ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் பேரவைக்கு வெளியே தா்ணா

எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி மற்றும் பிற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை தில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைவது தடுக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் வெளியே தா்ணாவில் ஈடுபட்டனா். சட்டப்பேரவையில் ச... மேலும் பார்க்க