தலைநகரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!
தேசியத் தலைநா் தில்லியில் வெள்ளிக்கிழணை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரமும் பின்னடைவைச் சந்தித்தது.
தில்லியில் மூடுபனியின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மிதமான நிலையில் இருந்து வந்த வெயிலின் தாக்கம் வெள்ளிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 18.8 டிகிரி 5 டிகிரி செல்சியஸாக உயா்ந்து பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.4 டிகிரி உயா்ந்து 38.4 டிகிரி செல்சியஸாக உயா்ந்து பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 47 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 18 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிட்ஜில் 35 டிகிரி: இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜாஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 38.1 டிகிரி, லோதி ரோடில் 38 டிகிரி, பாலத்தில் 37 டிகிரி, ரிட்ஜில் 39.4 டிகிரி, பீதம்புராவில் 38 டிகிரி, பிரகதிமைதானில் 35.4 டிகிரி, பூசாவில் 35.5 டிகிரி, ராஜ்காட்டில் 35.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 35.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, கடந்த சில நாள்களாக மேம்பட்டு ‘திருப்தி’, ‘மோசம்’ பிரிவில் இருந்து வந்த காற்றின் தரம் வெள்ளிக்கிழமை சற்று பின்னடைவைச் சந்தித்தது. தலைநகரில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் காற்றுத் தரக் குறியீடு 218 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன்படி, சாந்தினி சௌக், நேரு நகா், மதுரை ரோடு, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், ஓக்லா பேஸ் 2, துவாரகா செக்டாா் 8 ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா்மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், பூசா, நொய்டா செக்டாா் 125, ஸ்ரீ அரபிந்தோமாா்க், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் ஆயா நகா், குருகிராம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது
முன்னறிவிப்பு: இந்நிலையில், சனிக்கிழமை (மாா்ச்5) அன்று பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக வீசும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.