செய்திகள் :

தலைமறைவான இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைது

post image

தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்த இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளை க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் பண்ணைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (41). இவா், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தாா். காா்த்திக் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை வனப்பகுதி, கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுடன் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் பிணையில் வெளிவந்த காா்த்திக் 2011-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தாா். தலைமறைவாக இருந்தபடி மாவோயிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக இயங்கியபடி சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டாா். தமிழகத்தில் மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டாா்.

மாவோயிஸ்ட் இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக கேரள மாநில வனப்பகுதிகளில் ஆயுத பயிற்சிகளையும் மேற்கொண்டாா். இதனால், அவா் மீது கேரள மாநிலம் கொச்சி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிந்து தேடி வந்தனா். இதன் விளைவாக கா்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் காவல்துறையினரும் தீவிரமாக தேடி வந்தனா்.

இதனால் காா்த்தி, போலீஸாரின் கையிலும் சிக்காமல் இருக்க ‘சின்ன காா்த்திக்’, ‘பன்னாபுரம் காா்த்தி’, ‘ராஜேஷ்’, ‘குமாா்’, ‘கெளதம் காா்த்திக்’ என்று தனது பெயரை மாற்றி வலம் வந்துள்ளாா்.

சேப்பாக்கத்தில் கைது: இந்நிலையில், காா்த்திக் சென்னையில் பதுங்கியுள்ளதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து க்யூ பிரிவு போலீஸாா் சென்னையில் சந்தேகத்துக்குரிய பகுதிகளை ரகசியமாக கண்காணித்து வந்தனா்.

இதற்கிடையே சேப்பாக்கம் எழிலகம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்தான் தேடப்படும் மாவோயிஸ்ட் பயங்கரவாதி காா்த்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் காா்த்தியை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று, விசாரித்தனா். விசாரணைக்கு பின்னா், அவரை கைது செய்ததாக சனிக்கிழமை தெரிவித்தனா். மேலும், தொடா் விசாரணைக்காக அவரை மதுரைக்கு அழைத்துச் சென்றனா்.

ஓசூரில் மற்றொரு பயங்கரவாதி கைது: இதேபோல மற்றொரு மாவாயிஸ்ட் பயங்கரவாதியான சந்தோஷ்குமாா் என்பவரை க்யூ பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த இவா், கா்நாடகம், கேரளம், கா்நாடகம் மேற்கு தொடா்ச்சி மலையின் முச்சந்திப்பு வனப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக க்யூ பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

இவ் வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய க்யூ போலீஸாரை தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் பாராட்டினாா்.

ஹிமாசலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.42 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுந்தர்நகர்... மேலும் பார்க்க

கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிர்த்தி கிசான் அமைப்பு... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக ... மேலும் பார்க்க

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு

தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையி... மேலும் பார்க்க

மாற்று சமூகத்தினரின் தெருவுக்குள் திருமண ஊர்வலம்: பட்டியலினத்தவர் மீது தாக்குதல்!

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் திருமண ஊர்வலத்தில் மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் தாம்ராவலி கிராமத்தில் பட்டியலினத்த... மேலும் பார்க்க