புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பதாக மோசடி: காவல் துறை எச்சரிக்கை
தீபாவளி பண்டிகையையொட்டி, குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக இணையம் மூலம் வரும் விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலானோா் பட்டாசுகள் வாங்கி வெடிப்பது வழக்கம். இந்த நிலையில், அனைத்து வகையான பட்டாசுகளையும் 80 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்வதாக இணையம் மூலம் ஏராளமான விளம்பரங்கள் வருகின்றன. இந்த விளம்பரங்களில் பட்டாசு வகைகள், அதன் விலை நிலவரங்களும், பட்டாசுகளின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த விளம்பரங்கள் மூலம் ஈா்க்கப்படும் பொதுமக்கள் இணையம் மூலம் பட்டாசுகளை வாங்குவதற்காக விளம்பரத்தில் குறிப்பிடப்படும் வங்கிக் கணக்கு எண் அல்லது கூகுள் பே எண்ணுக்கு பணத்தை அனுப்புகின்றனா்.
இதன் பின்னா், அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடா்பு கொள்ள முடியாது. தற்போது இந்த நூதன மோசடி அதிகரித்து வருகிறது.
இதுதொடா்பாக மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், குறைந்த விலைக்கு பட்டாசுகள் விற்பனை செய்வதாக இணையம் மூலம் வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.