செய்திகள் :

தவெக: "எழுதிக்கொடுக்கும் சினிமா டயலாக்கை சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதை மக்கள் விரும்பவில்லை" - அப்பாவு

post image

நெல்லையில் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பான அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் முதல் மொழி தமிழ். தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. எனவே மூன்றாவதாக இந்தி தேவையில்லை. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அதேபோல மும்மொழிக் கொள்கையும் தேவையில்லை. அதற்காக மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் உள்ளது.

சபாநாயகர் அப்பாவு
அப்பாவு

தமிழகத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்காக நிதியைத் தர மறுக்கின்றனர். மத்திய அரசு தமிழ்நாட்டில் புதிய கட்சிகளைத் தொடங்கச் சொல்லியுள்ளனர். அதன் மூலம் இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைக்கின்றனர். நான் நடிகர் விஜய்யைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அவரை கட்சி தொடங்கச் சொன்னதாகக் கூறுகிறார்கள். அவருக்குக் கேட்காமலேயே ஒய் பிரிவு பாதுகாப்பினைக் கொடுத்துள்ளனர். தனி விமானம் கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.

அந்த அகந்தையில் சினிமாவில் பேசுவதைப் போல் பேசுகிறார். 'நான் பிரசாரத்திற்கு வந்தால் கண்டிஷன்கள் போடுகின்றனர். பிரதமரோ அமித்ஷாவோ வந்தால் இப்படி கண்டிஷன் போடுவார்களா? சி.எம் சாரைக் கேட்டுப்பாருங்கள்' என்கிறார்.

விஜய்க்கு அரசியல் அரிச்சுவடி தெரியவில்லை. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, முதல்வரோ வந்தால் அவர்களுக்கான ப்ரோட்டாகால் என்ன? விஜய்யின் ப்ரோட்டோகால் என்ன? என்பதை அவர் தெரிந்து பேச வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு
அப்பாவு

கண்ணியக்குறைவான வார்த்தைகளை அவர் தவிர்க்க வேண்டும். யாரோ எழுதிக்கொடுக்கும் சினிமா டயலாக்கை சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதை மக்கள் விரும்பவில்லை. தமிழ்நாட்டில் விஜய் குறிப்பிடுவதைப் போல அவரைத் தவிர அரசியல் கட்சி நடத்தும் யாருக்கும் பயம் இல்லை. தலைவா படப்பிடிப்புக்காக கொடநாட்டில் 3 நாட்கள் காத்துக்கிடந்து காலில் விழுந்தது யார் என்பது தெரியும்” என்றார்.

"நான் ZOHO-வுக்கு மாறுகிறேன்" - பிரதமரின் `சுதேசி' வேண்டுகோளை ஏற்ற மத்திய அமைச்சர்

இம்மாத தொடக்கத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பிரதமர் மோடியின் சுதந்திர தின அறிவிப்பின்படி ஏற்கெனெவே இருந்த வரி விகிதத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.அதன்படி, சீரமைக்கப்பட்ட ஜி.எ... மேலும் பார்க்க

"இந்தி வந்தால் அடுத்து சமஸ்கிருதம் வரும்; சிந்தனையை மழுங்கடிக்கும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இத... மேலும் பார்க்க

Congress support இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியமைக்க முடியாது - Data Head Praveen Chakravarty

2026ல்- விஜய் புதிதாக களமிறங்குவதால் அரசியல் சூழல் முன்பைப் போல் இல்லாமல் மாறியுள்ளது. விஜய் எந்தளவுக்கு தாக்கம் செலுத்துவார் என்று எழும் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கணிப்புகளை கூறுகின்றனர்... மேலும் பார்க்க

``மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்'' - சுகாதார சீர்கேட்டால் அவதிப்படும் சோழவரம் மக்கள்

புழல் ஏரிகடலே பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்குப் பரப்பளவு கொண்ட ஏரிதான் நம்ம புழல் ஏரி. இந்த ஏரியில் தண்ணீர் இல்லாமல் போனால், சிங்காரச் சென்னையே தத்தளித்துவிடும். மழை பெய்யும் போது புழல் ஏரியைச் சுற்... மேலும் பார்க்க

``கட்டுறாங்க, கட்டுறாங்க 15 வருசமா பாலத்தை கட்டுறாங்க'' - குமுறும் திருமுல்லைவாசல் கிராம மக்கள்

திருமுல்லைவாசல்மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சியில் உப்பனாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியானது மாநில நெடுஞ்சாலைத்துறையால் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2007-ல் தொடங்கப்பட்... மேலும் பார்க்க

சீனாவின் ராஜதந்திரம் : அமெரிக்கா மீது ஆதிக்கம் செலுத்தும் சீனா?

சமேரியம், கடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், ஸ்காண்டியம், லூட்டேஷியம், இட்ரியம்... வாயிலேயே நுழையாத இந்தப் பெயர்கள் என்ன என உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். இவை அரியவகை கனிமங்கள். இப்படி 17 கனிமங... மேலும் பார்க்க