செய்திகள் :

தவெக மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்: என்னென்ன?

post image

தவெகவின் மதுரை மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில்,

• பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் தீர்மானம்.

• சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

• தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம்.

• ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.

• தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.

• அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், டிஎன்பிஎஸ்சி(TNPSC) உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! விஜய் குட்டிக் கதை!

மதுரை மாவட்டம், பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் பேசிய விஜய், பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா கூட்டணி என்பதால் மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது.

மறைமுகக் கூட்டணிக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்பதை வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் வேதனையுடன் தவிக்கிறார்கள்.

2026 பேரவைத் தேர்தலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும், எப்படிபட்ட ஆட்சி அமைய வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு குறிப்பிட்டார்.

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

வலையில் சிக்கிய 150 கிலோ எடையிலான ஆமையை மீனவர் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டார்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மனோரா கடல் பகுதியில் மீன் பிடிக்க வலையை வீசி மீனவர் கல்யாணகுமார் இன்று காத்த... மேலும் பார்க்க

இது கூட தெரியாமல் எப்படி ஒரு கட்சித் தலைவராக இருக்க முடியும்? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

மதுரை மாநாட்டில் அதிமுக குறித்த விஜய்யின் விமர்சனத்திற்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். மதுரை மாவட்டம் பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வியாழக்கி... மேலும் பார்க்க

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் இன்று தொடங்கி நிறைவு பெற்ற நிலையில், மாநாட்டுக்கு வந்தவர்களின் வாகனங்களால் பாரபத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் திணறி வருகிறது.தம... மேலும் பார்க்க

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! விஜய் குட்டிக் கதை!

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம் என்று தவெக மாநாட்டில் விஜய் குட்டிக் கதையொன்று தெரிவித்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று... மேலும் பார்க்க

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்டு பேசியுள்ளார். மதுரையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-... மேலும் பார்க்க

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

தமிழக குழந்தைகளுக்கு நான்தான் தாய்மாமன் என்று தவெக மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ... மேலும் பார்க்க