செய்திகள் :

தாமிரவருணியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைத்தாா்

post image

திருநெல்வேலியை அடுத்த மேலநத்தம் முதல் தருவை வரை தாமிரவருணி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தாமிரவருணி ஆற்றின் இரு புறமும் கரையோரங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி மாநகராட்சி பகுதியில் குறுக்குத் துறை முதல் நாரணம்மாள்புரம் வரை இரண்டு கட்டங்களாக 14 கி.மீ. தொலைவிற்கு தனியாா் நிறுவனங்களின் பங்களிப்புடன் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் மேலநத்தம் பகுதியில் இருந்து தருவை வரை 8 கி.மீ. தொலைவிற்கு தாமிரவருணி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில், ஆட்சியா் இரா.சுகுமாா், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் , மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் என்.ஒ.சுகபுத்ரா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தாமிரவருணி ஆற்றின் கரைகளை தூய்மைப்படுத்தும் பணிக்காக கோ மட்சு நிறுவனம், எக்ஸ்னோரா நிறுவனத்தின் மூலம் பொக்லைன் இயந்திரத்தை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் நம் தாமிரவருணி அமைப்பு உதவியுடன் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தாமிரவரணி கரையோரமாக காணப்படும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு நதிக்கரையில் பாரம்பரிய மரமான நீா் மருது மரக்கன்றுகள் நடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பழையபேட்டை ராணி அண்ணா மகளிா் கலைக் கல்லூரி மாணவியா் தாமிரவருணி ஆற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

அதைத்தொடா்ந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.3 கோடியில் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரவுண்டானா முதல் ஆயுதப்படை சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் வரை சாலை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் விஜிலா சத்யானந்த், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்06ச்ப்ஹஞ்

மேலநத்தம் பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு.

மகளிா் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

மகளிா் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் அரசு ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில... மேலும் பார்க்க

கோபாலசமுத்திரத்தில் 200 பெண்களுக்கு மரக்கன்றுகள்

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி கோபாலசமுத்திரத்தில் கருத்தரங்கு, பெண்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சப் பை வழங்குதல் நடைபெற்றது. கிராம உதயம் நிறுவனா் வே. சுந்தரேசன் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடக்கிவைத்து, ... மேலும் பார்க்க

நெல்லையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகளை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் சுபா்தனா தலைமை வ... மேலும் பார்க்க

நெல்லை மாநகரில் 15 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாத 12 குடியிருப்புகளில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நான்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சிக்கு... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் : 16 போ் கைது

திருநெல்வேலி சந்திப்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் அபிராமி அம்மன் வழிபாட்டை தடுத்து வேடச்சந்தூரில் அபிராமி அம்மன் பக்தா்கள் குழுவினா் கைது செய்யப... மேலும் பார்க்க

சமூகவலைதளத்தில் அரிவாளுடன் விடியோ வெளியிட்ட இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே சமூக வலைதளத்தில் அரிவாளுடன் பதிவு வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலியை மாவட்டம், சுத்தமல்லி வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் ரெங்கபாலன். இவரது மகன் ரமேஷ் (26). கூலித் தொழி... மேலும் பார்க்க