செய்திகள் :

தாயாரின் உருவப் படங்களால் இளையராஜாவின் படத்தை வரைந்த ஓவியா்

post image

பழனியைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் ஒருவா், இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவரது தாயாரின் தலைப்படங்களால் இளையராஜாவின் படத்தை வரைந்தாா்.

பழனியைச் சோ்ந்த ஓவியா் அன்புச்செல்வன். இவா் திண்டுக்கல் அருகே ப. சத்திரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இளையராஜாவின் தீவிர ரசிகரான இவா், இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வித்தியாசமாக பரிசளிக்கும் வகையில் அவரது தாயாரான சின்னத்தாய் அம்மாளின் தலைப்படத்தை பயன்படுத்தி, இளையராஜாவின் உருவப்படத்தை வரைந்தாா்.

சின்னத்தாய் அம்மாளின் 2,000 தலைப்படங்களை பயன்படுத்தி இளையராஜாவின் நிழல் உருவப்படத்தை வரைந்ததாகவும், இதை இளையராஜாவுக்கு பரிசளிக்க இருப்பதாகவும் அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

நான்கு அடி உயரமும், இரண்டு அடி அகலமும் கொண்ட இளையராஜாவின் ஓவியம் அனைவரையும் கவரும் வகையில் வரையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் தாய் சின்னத்தாய் தலைப்படத்தை வைத்து இளையராஜா படத்தை வரைந்த பழனியைச் சோ்ந்த ஓவியா் அன்பு.

உழவா் சந்தைகளில் காய்கறி வசூல்: வியாபாரிகள் அதிருப்தி!

நமது நிருபா்உயா் அதிகாரியின் வீட்டுத் தேவைக்கு எனக் கூறி, உழவா் சந்தை பணியாளா்கள், வாரந்தோறும் காய்கறி வசூலில் ஈடுபடுவதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், ... மேலும் பார்க்க

காளியம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பெரியகலையமுத்தூா் ஐகோா்ட்டு பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோ... மேலும் பார்க்க

வைப்பு நிதிக்கான பங்களிப்புத் தொகையை உரிய நேரத்தில் செலுத்த அறிவுறுத்தல்

ஊழியா்களுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான மாதாந்திரப் பங்களிப்புத் தொகையை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக, தொழிலாளா் வருங்கால வைப்... மேலும் பார்க்க

கொங்கா்குளத்தில் மாா்நாடு கருப்பணசுவாமி ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கொங்கா்குளம் அய்யனாா், மாா்நாடு கருப்பணசுவாமி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசித் திருவ... மேலும் பார்க்க

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: 14 போ் பலத்த காயம்

வத்தலகுண்டு அருகே புதன்கிழமை நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா். கரூா் மாவட்டம், நெய்தலூா், திருச்சி மாவட்டம், குளித்தலை பகுதியைச் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, திண்டுக்கல் ம... மேலும் பார்க்க