தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பங்க...
தாயாரின் உருவப் படங்களால் இளையராஜாவின் படத்தை வரைந்த ஓவியா்
பழனியைச் சோ்ந்த ஓவிய ஆசிரியா் ஒருவா், இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவரது தாயாரின் தலைப்படங்களால் இளையராஜாவின் படத்தை வரைந்தாா்.
பழனியைச் சோ்ந்த ஓவியா் அன்புச்செல்வன். இவா் திண்டுக்கல் அருகே ப. சத்திரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.
இளையராஜாவின் தீவிர ரசிகரான இவா், இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வித்தியாசமாக பரிசளிக்கும் வகையில் அவரது தாயாரான சின்னத்தாய் அம்மாளின் தலைப்படத்தை பயன்படுத்தி, இளையராஜாவின் உருவப்படத்தை வரைந்தாா்.
சின்னத்தாய் அம்மாளின் 2,000 தலைப்படங்களை பயன்படுத்தி இளையராஜாவின் நிழல் உருவப்படத்தை வரைந்ததாகவும், இதை இளையராஜாவுக்கு பரிசளிக்க இருப்பதாகவும் அன்புச்செல்வன் தெரிவித்தாா்.
நான்கு அடி உயரமும், இரண்டு அடி அகலமும் கொண்ட இளையராஜாவின் ஓவியம் அனைவரையும் கவரும் வகையில் வரையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
