செய்திகள் :

தாய்மொழியில் மருத்துவக் கல்வி ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதம்! -பிரதமர் மோடி

post image

நாகபுரி: தாய்மொழியில் மருத்துவம் பயிலலாம் என்கிற நடைமுறை கொண்டுவரப்பட்டிருப்பது ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் அமைந்துள்ள ஆா்எஸ்எஸின் நிறுவனத் தலைவா்களின் நினைவிடங்களுக்கு இன்று(மார்ச் 30) சென்றுள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி: “இந்த உலகம் ஒரே குடும்பம் போன்றது என்கிற நமது தாரக மந்திரமானது உலகின் அனைத்து மூலைகளிலும் சென்றடைந்துள்ளது.

இந்திய விடுதலைக்குப்பின் நாங்கள் மிக துணிச்சலானதொரு நடவடிக்கையை எடுத்தோம். அது என்னவென்றால் - ஏழை மாணவர்கள் மருத்துவர்களாக வசதியாக, அவரவர் தம் தாய்மொழியில் மருத்துவம் பயிலலாம் என்பதேயாகும்.

இதுபோன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளால், மருத்துவத் துறையிலும் நாங்கள், நமது பாரம்பரிய ஞானத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். நமது யோகா, ஆயுர்வேதா ஆகிய மருத்துவ சிகிச்சை முறைகள், இப்போது ஒட்டுமொத்த உலகத்திலும் புது அங்கீகாரத்தை பெற்றுத் திகழ்கின்றன. இந்தியாவின் மதிப்பும் உயர்ந்து வருகிறது.”

“நமது நாட்டின் வரலாற்றை திரும்பிப்பார்த்தால், நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்திருக்கிறோம், பல்வேறு தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.இந்தியாவின் சமூக கட்டமைப்பை தகர்க்க கொடிய முயற்சிகள் பல அரங்கேறியுமுள்ளன. ஆனால், இந்தியாவின் சுய சிந்தனை உயிர்ப்புடன் விளங்குகிறது.

இது எப்படி சாத்தியமானது? பல்வேறு தருணங்களிலும் பல இயக்கங்கள் செயல்பாடுகள் இதை கட்டிக்காத்துள்ளன.குரு நானக் தேவ், கபீர் தாஸ், துளசி தாஸ், சூர் தாஸ், புனித துக்காராம், இன்னும் பலர் அவர்களது தார்மீக மதிப்புகளாலும் நடவடிக்கைகளாலும் நமது தேசிய சுய சிந்தனைக்கு உயிர்கொடுத்துள்ளனர்.

நம்பிக்கையின்றி துவண்டுபோயிருந்த சமுதாயத்தில் சுவாமி விவேகானந்தர் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்” என்றார்.

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க