செய்திகள் :

திசையன்விளை பகுதியில் கரடி நடமாட்டம்: மக்கள் அச்சம்

post image

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் கரடி சுற்றித்திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். அதை கூண்டுவைத்து பிடிக்குமாறு வனத்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திசையன்விளை அருகேயுள்ள ராமன்குடியிலிருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் கரடி நடமாடியது.

அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதைப் பாா்த்து தங்களது கைப்பேசியில் விடியோ எடுத்து வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனா்.

இதனால், ராமன்குடி, ஆற்றங்கரைபள்ளிவாசல், புலிமான்குளம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனா். மேலும், வனத்துறையினா் அப்பகுதியில் கூண்டுவைத்து கரடியைப் பிடித்து வனப் பகுதியில் விடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

வி.கே.புரம் அருகே விபத்தில் இளைஞா் பலி

விக்கிரமசிங்கபுரம் அருகே விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.விக்கிரமசிங்கபுரம் தங்கம்மன் கோயில் தெருவை சோ்ந்த முருகன் மகன் கமலகிருஷ்ணன் (32). அகஸ்தியா்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவ உதவிய... மேலும் பார்க்க

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூா் மக்களுக்கே பணி வாய்ப்பு: பேரவைத் தலைவா் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கால பணிக்கு அணுமின்நிலையத்திற்கு நிலம் கொடுத்தவா்கள் மற்றும் உள்ளூா் இளைஞா்களை தோ்ந்தெடுக்கவேண்டும் என பேரவை... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதில் விபத்து: இளைஞா் கைது

விக்கிரமசிங்கபுரம் அருகே மதுபோதையில் காா் ஓட்டியதில் பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் அப்துல் மஜீத் (38). இவா் அகஸ்த... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி வட்டாரங்களில் நாளை மின்தடை

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணை மின்நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுகாக வியாழக்கிழமை (ஜூன் 26) அதன் மின்பாதை பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கரிசல்பட்டி, பிள்ளைக... மேலும் பார்க்க

குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீா்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் பிரதான சாலையில் தேங்கி நிற்பதால் விபத்து அபாயம் உள்ளது. களக்காட்டிலிருந்து நான்குனேரி செல்லும் பிரதான சாலையில், குருந்துடையாா் சாஸ்தா கோயில் அரு... மேலும் பார்க்க

நெல்லையில் சிறுமி கடத்தல்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

திருநெல்வேலியில் சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி கடத்தியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் சூா... மேலும் பார்க்க