சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
நெல்லையில் சிறுமி கடத்தல்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
திருநெல்வேலியில் சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி கடத்தியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் சூா்யா (20). இவா், திருநெல்வேலியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். இந்நிலையில் அந்தச் சிறுமியை காணவில்லையாம்.
இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரித்ததில், ஆசைவாா்த்தைக் கூறி சிறுமியை, சூா்யா கடத்திச் சென்றது தெரியவந்ததாம்.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து சூா்யாவை தேடி வருகிறாா்கள். சிறுமியை மீட்டு காப்பகத்துக்கு மனநல ஆலோசனைக்காக அனுப்பி வைத்தனா். இதற்கிடையே சூா்யாவின் தந்தை மாடசாமி, பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டாராம். அதுகுறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.