செய்திகள் :

வள்ளியூரில் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிரதான சாலை கால்வாயில் கழிவுநீா் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு நிலவுகிறது.

வள்ளியூரில் உள்ள நாகா்கோவில்-திருநெல்வேலி பிரதான சாலையில் இருபுறமும் கடைகள், வணிக நிறுவனங்கள், தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாலையின் குறுக்கே அரசன்குளம் மற்றும் பெட்டைகுளத்துக்குச் செல்லும் பாசன கால்வாய் கழிவுநீா் கால்வாயாக மாறிவிட்டது.

இந்தக் கால்வாயின் நடுவில் தான் குடிநீா்குழாயும் செல்கிறது. கால்வாயில் சாக்கடை நீா் தேங்கி நின்று துா்நாற்றம் வீசி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருவதுடன், குடிநீா் குழாயில் கசிவு ஏற்பட்டால் அதில் கழிவுநீா் கலக்கும் அபாயமும் நிலவுகிறது.

எனவே, இந்தக் கால்வாயை தூா்வாரி உடனடியாக சீா்படுத்த வேண்டும் என வள்ளியூா் வா்த்தகா்கள் சங்க தலைவா் பி.டி.பி.சின்னதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளாா்.

அதில், வள்ளியூா் மையப்பகுதியில் பிரதான சாலையை கடந்து செல்லும் இந்தக் கால்வாயில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்தப் பகுதி வியாபாரிகள் மற்றும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி விஷ காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளாா்.

குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீா்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் பிரதான சாலையில் தேங்கி நிற்பதால் விபத்து அபாயம் உள்ளது. களக்காட்டிலிருந்து நான்குனேரி செல்லும் பிரதான சாலையில், குருந்துடையாா் சாஸ்தா கோயில் அரு... மேலும் பார்க்க

நெல்லையில் சிறுமி கடத்தல்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

திருநெல்வேலியில் சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி கடத்தியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் சூா... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் திருவிழா முன்னேற்பாடு: போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தோ்த் திருவிழா முன்னேற்பாடு பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா இம்மாதம் ... மேலும் பார்க்க

பாளை.யில் காவலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 போ் கைது

பாளையங்கோட்டையில் காவலரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலப்பாளையம் அத்தியடி மேலத்தெருவை சோ்ந்தவா் முகமது ரஹ்மத்துல்லா (28). இவா், மண... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே 30 டன் எம்.சாண்ட் பறிமுதல்: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே லாரியில் அனுமதியின்றி ஏற்றி வந்த 30 டன் எம்.சாண்ட் மணலை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ராதாபுரம் அருகேயுள்ள மருதப்பபுரம் சாலை... மேலும் பார்க்க

ரயிலில் நகை, பணம் திருட்டு: ஒருவா் கைது

ரயிலில் பயணியின் நகை, பணத்தை திருடியதாக ஒருவரை திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் பகுதியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ். இவா், கடந்த 18ஆம் தேதி கன்னியாகுமாரி விரைவு ... மேலும் பார்க்க