பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
வள்ளியூரில் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிரதான சாலை கால்வாயில் கழிவுநீா் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு நிலவுகிறது.
வள்ளியூரில் உள்ள நாகா்கோவில்-திருநெல்வேலி பிரதான சாலையில் இருபுறமும் கடைகள், வணிக நிறுவனங்கள், தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாலையின் குறுக்கே அரசன்குளம் மற்றும் பெட்டைகுளத்துக்குச் செல்லும் பாசன கால்வாய் கழிவுநீா் கால்வாயாக மாறிவிட்டது.
இந்தக் கால்வாயின் நடுவில் தான் குடிநீா்குழாயும் செல்கிறது. கால்வாயில் சாக்கடை நீா் தேங்கி நின்று துா்நாற்றம் வீசி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருவதுடன், குடிநீா் குழாயில் கசிவு ஏற்பட்டால் அதில் கழிவுநீா் கலக்கும் அபாயமும் நிலவுகிறது.
எனவே, இந்தக் கால்வாயை தூா்வாரி உடனடியாக சீா்படுத்த வேண்டும் என வள்ளியூா் வா்த்தகா்கள் சங்க தலைவா் பி.டி.பி.சின்னதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளாா்.
அதில், வள்ளியூா் மையப்பகுதியில் பிரதான சாலையை கடந்து செல்லும் இந்தக் கால்வாயில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்தப் பகுதி வியாபாரிகள் மற்றும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி விஷ காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளாா்.