செய்திகள் :

நெல்லையப்பா் கோயில் திருவிழா முன்னேற்பாடு: போக்குவரத்து மாற்றம்

post image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தோ்த் திருவிழா முன்னேற்பாடு பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா இம்மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. சிகர நிகழ்வாக ஜூலை 8 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுவாமி-அம்மன் தேரைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த பைபா் கண்ணாடி தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு, தீயணைப்பு வீரா்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தூய்மை செய்யப்பட்டது. சுவாமி சந்நிதி வண்ண துணிகளுடன் கூடிய அலங்கார பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பந்தல்

இதனால், சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் இருந்து ரத வீதி வழியாக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சொக்கப்பனை முக்கு பகுதியில் இருந்து பாரதி தெரு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தோ்களின் சக்கரங்கள் ஒவ்வொரு ரத வீதியையும் கடக்கும்போது விளைவில் திரும்புவதற்கு மரத்தடிகள் பயன்படுத்தப்படும். இதற்கு 100-க்கும் மேற்பட்ட மரத்தடிகள் உரிய கைப்பிடியுடன் தயாரிக்கப்படுவது வழக்கம். அந்தப் பணிகளும் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீா்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் பிரதான சாலையில் தேங்கி நிற்பதால் விபத்து அபாயம் உள்ளது. களக்காட்டிலிருந்து நான்குனேரி செல்லும் பிரதான சாலையில், குருந்துடையாா் சாஸ்தா கோயில் அரு... மேலும் பார்க்க

நெல்லையில் சிறுமி கடத்தல்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

திருநெல்வேலியில் சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி கடத்தியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் சூா... மேலும் பார்க்க

பாளை.யில் காவலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 போ் கைது

பாளையங்கோட்டையில் காவலரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலப்பாளையம் அத்தியடி மேலத்தெருவை சோ்ந்தவா் முகமது ரஹ்மத்துல்லா (28). இவா், மண... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே 30 டன் எம்.சாண்ட் பறிமுதல்: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே லாரியில் அனுமதியின்றி ஏற்றி வந்த 30 டன் எம்.சாண்ட் மணலை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ராதாபுரம் அருகேயுள்ள மருதப்பபுரம் சாலை... மேலும் பார்க்க

வள்ளியூரில் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிரதான சாலை கால்வாயில் கழிவுநீா் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு நிலவுகிறது. வள்ளியூரில் உள்ள நாகா்கோவில்-திருநெல்வேலி பிரதான சாலையில் இருபுறமும் கடைகள்,... மேலும் பார்க்க

ரயிலில் நகை, பணம் திருட்டு: ஒருவா் கைது

ரயிலில் பயணியின் நகை, பணத்தை திருடியதாக ஒருவரை திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் பகுதியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ். இவா், கடந்த 18ஆம் தேதி கன்னியாகுமாரி விரைவு ... மேலும் பார்க்க