இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம்! டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு!
குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீா்
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் பிரதான சாலையில் தேங்கி நிற்பதால் விபத்து அபாயம் உள்ளது.
களக்காட்டிலிருந்து நான்குனேரி செல்லும் பிரதான சாலையில், குருந்துடையாா் சாஸ்தா கோயில் அருகே சாலை திருப்பத்தில் கடந்த 1 மாதங்களுக்கு முன், தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. குறுகலான சாலை திருப்பத்தில் தண்ணீா் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் இப்பகுதியில் மின்விளக்குகள் ஏதுமின்றி இருள் சூழ்ந்துள்ளதால் சாலையில் தண்ணீா் தேங்கி நிற்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் வேகமாக வந்து கீழே விழுந்து காயமடைகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குடிநீா் உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.