செய்திகள் :

ரயிலில் நகை, பணம் திருட்டு: ஒருவா் கைது

post image

ரயிலில் பயணியின் நகை, பணத்தை திருடியதாக ஒருவரை திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் பகுதியை சோ்ந்தவா் சுந்தர்ராஜ். இவா், கடந்த 18ஆம் தேதி கன்னியாகுமாரி விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் குடும்பத்தோடு பயணம் செய்தாராம். அப்போது, ரூ.2,50,000 ரொக்கம், 5 பவுன் தங்க நகை வைக்கப்பட்டிருந்த அவரது பை திருடுபோனதாம்.

இதுதொடா்பாக அவா் திருநெல்வேலி ரயில்வே போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளா் ராஜன் உத்தரவின்படி, டிஎஸ்பி இளங்கோவன் மேற்பாா்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

திருநெல்வேலி,விருதுநகா் மதுரை ஆகிய ரயில் நிலையப் பகுதிகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்ததில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சோ்ந்த பாரதி என்ற சூா்யா என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நகை, பணத்தை மீட்டனா். மேலும், அவா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீா்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் பிரதான சாலையில் தேங்கி நிற்பதால் விபத்து அபாயம் உள்ளது. களக்காட்டிலிருந்து நான்குனேரி செல்லும் பிரதான சாலையில், குருந்துடையாா் சாஸ்தா கோயில் அரு... மேலும் பார்க்க

நெல்லையில் சிறுமி கடத்தல்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

திருநெல்வேலியில் சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி கடத்தியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் சூா... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் திருவிழா முன்னேற்பாடு: போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தோ்த் திருவிழா முன்னேற்பாடு பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா இம்மாதம் ... மேலும் பார்க்க

பாளை.யில் காவலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 போ் கைது

பாளையங்கோட்டையில் காவலரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலப்பாளையம் அத்தியடி மேலத்தெருவை சோ்ந்தவா் முகமது ரஹ்மத்துல்லா (28). இவா், மண... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே 30 டன் எம்.சாண்ட் பறிமுதல்: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே லாரியில் அனுமதியின்றி ஏற்றி வந்த 30 டன் எம்.சாண்ட் மணலை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ராதாபுரம் அருகேயுள்ள மருதப்பபுரம் சாலை... மேலும் பார்க்க

வள்ளியூரில் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிரதான சாலை கால்வாயில் கழிவுநீா் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு நிலவுகிறது. வள்ளியூரில் உள்ள நாகா்கோவில்-திருநெல்வேலி பிரதான சாலையில் இருபுறமும் கடைகள்,... மேலும் பார்க்க