செய்திகள் :

திடீரென நீக்கப்பட்ட இயக்குநர்; நடிகையுடனான பிரச்னை காரணமா? `வள்ளியின் வேலன்' தொடரில் என்ன நடக்கிறது?

post image
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'வள்ளியின் வேலன்'. 'கலர்ஸ்' சேனலில் ஒளிபரப்பான 'திருமணம்' தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமான சித்து - ஸ்ரேயா ஜோடி திருமணத்துக்குப் பின் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரிக்காகவே இந்த சீரியல் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தத் தொடரில் நடித்து வந்த நடிகர் சாக்‌ஷி சிவா சில மாதங்களுக்குத் தொடரிலிருந்து வெளியேறினார். ஏதோவொரு பிரச்னையில்தான் அவர் வெளியேறியதாகச் சொல்லப்பட்டது.

தொடர்ந்து சில தினங்களுக்கு முன் சீரியலில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்து வரும் நடிகை நிமிஷாவுக்கு ஏதோ பிரச்னை என ஷூட்டிங்கே சில மணி நேரம் நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

இது தொடர்பாக சீரியல் யூனிட்டைச் சேர்ந்த சிலரிடம் நாம் பேசியபோது,

''சீரியலின் இயக்குநர் பிரதாப் ஆர்ட்டிஸ்டுகளிடம் நடந்துக்கிற விதம் ரொம்பவே மோசமா இருக்கு. ஹீரோ ஹீரோயின் தவிர மத்த எல்லா ஆர்ட்டிஸ்ட்டுகளையுமே அவர் மரியாதை இல்லாம நடத்துறார். ஒருமையில பேசறது, காரணமே இல்லாம திட்டறதுன்னு அவருடைய நடவடிக்கைகள் போயிட்டிருக்கு. ஒரு நடிகையுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட சர்ச்சை விவகாரம் சேனல் வரை போனது'' என்றனர்.

சித்து - ஸ்ரேயா

இந்நிலையில் தற்போது இயக்குநர் பிரதாப் 'வள்ளியின் வேலன்' தொடரிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கடந்த வாரம் இந்த அதிரடி நடந்ததாகக் கூறுகிறார்கள். அவருக்குப் பதில் தற்போது ஜீவா என்பவர் தொடரை இயக்க வந்திருக்கிறாராம்.

சீரியல் தொடர்புடைய வேறு சிலரிடம் பேசியபோது, ``இவர் முன்னாடி ஒர்க் பண்ணின ஒரு சீரியல்லயும் நடிகைகூட பிரச்னை உண்டாகி, பாவம் அப்ப அந்த நடிகை தொடர்ல இருந்து வெளியே போனாங்க. எவ்வளவு நாள்தான் ஒருத்தர் தொடர்ந்து அக்கிரமங்களைச் செய்துகிட்டே இருக்க முடியும்? இப்ப இவருக்கு எதிராகத் திரும்பிடுச்சு" என்கிறார்கள் அவர்கள்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

``சிவராத்திரிக்கு தமிழ்நாட்டில் இருக்க மாட்டேன்; சிவன் எழுத்தைப் பார்க்கப் போறேன்" - நடிகை மதுமிதா

'சின்ன பாப்பா பெரிய பாப்பா' உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளிலும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' முதலிய சில படங்களிலும் நடித்தவர் நடிகை மதுமிதா. விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும்கலந்து கொண்டவர். நடிப்பு தா... மேலும் பார்க்க

பையனூரில் அடுக்குமாடி குடியிருப்பு - சினிமா, டிவி நட்சத்திரங்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு!

கடந்த 2010-ம் ஆண்டு திமுகஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 1000 ஏக்கரில் திரைப்பட நகரம் அமைக்க உத்தரவிட்டிருந்தார் அப்போதையமுதல்வர் கருணாநிதி. அந்த பகுதியின் உள்ளேயே சினிமா மற்றும் சின்னத்திரை... மேலும் பார்க்க

Ethirneechal : ஆதி குணசேகரன் ஆட்டம் ஆரம்பம்; இம்முறையாவது பெண்கள் அணி ஜெயிக்குமா?

எதிர்நீச்சல் சீரியலின் முதல் பாகத்தில் குணசேகரன் தன் தங்கை ஆதிரைக்கு கரிகாலனுடன் கட்டாயத் திருமணம் செய்து வைப்பார். அந்த திருமணத்தை நிறுத்த ஜனனி, நந்தினி, ஈஸ்வரி ஆகியோர் (பெண்கள் அணி) பல முயற்சிகளை மே... மேலும் பார்க்க

Siragadikka Aasai: மீனாவால் பொசசிவ் ஆகும் ரோகிணி... ஆழமாகும் அருண்-சீதா நட்பு; அடுத்து என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில் பரசு தன் மகளின் திருமணத்திற்குப் பத்திரிக்கை வைக்க அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார். முத்து, மீனா, ரவி ஆகியோர் மகிழ்ச்சியுடன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க விஜயா... மேலும் பார்க்க

``காதல் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது!'' -திருணம் குறித்து மனம் திறக்கும் பாவ்னி!

பிக் பாஸ் வீட்டில் காதலை தொடங்கி, கடந்த 2023-ம் ஆண்டு காதலர் தினத்தன்று தங்களின் காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக அமீர் - பாவ்னி ஜோடி அறிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்தாண்டு காதலர் தினத்தன்று தங... மேலும் பார்க்க

7 முதல் 3 மணி வரை விடாத போன் கால்; ஓட்டமெடுத்த தேர்தல் அலுவலர்; செய்தி வாசிப்பாளர் சங்கப் பஞ்சாயத்து

சுமார் 500 பேர் உறுப்பினர்களாக இருக்கும் தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் இம்மாதக் கடைசியில் நடக்கவிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.தேர்தல் நடத்தும் ... மேலும் பார்க்க