செய்திகள் :

Siragadikka Aasai: மீனாவால் பொசசிவ் ஆகும் ரோகிணி... ஆழமாகும் அருண்-சீதா நட்பு; அடுத்து என்ன?

post image

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில் பரசு தன் மகளின் திருமணத்திற்குப் பத்திரிக்கை வைக்க அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார். முத்து, மீனா, ரவி ஆகியோர் மகிழ்ச்சியுடன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க விஜயாவும் மனோஜும் அவமானப்படுத்தும்படி பேசுகின்றனர்.

கல்யாண வேலைகள் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என முத்து சொல்ல, `ஓசிலியே எல்லாம் நடக்குது’ என்று பரசுவை அவமானப்படுத்தும்படி பேசுகிறார். அண்ணாமலை தன் நண்பரை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார். விஜயாவின் குணத்தை நன்கு அறிந்த பரசு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பொறுத்துக் கொள்கிறார்.

Siragadikka aasai

ரவி-ஸ்ருதி ஒரே உணவகத்தில் வேலை பார்ப்பது சில பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. ஸ்ருதியை ரவி வேண்டுமென்றே வேலை வாங்குகிறார். ஸ்ருதி கடுப்பாகி ரவியிடம் வாக்குவாதம் செய்கிறார். அவர்களின் வாக்குவாதமும் பார்க்க ரசிக்கும்படிதான் உள்ளது. எந்த வித டாக்ஸிக் வார்த்தைகளும் எண்ணங்களும் இன்றி தம்பதி வாக்குவாதம் செய்வது க்யூட்!

வித்யா மீனாவைச் சந்தித்து தன் காதலை வளர்க்க ஐடியா கேட்கிறார். முருகனின் மொபைலில் பெண்களின் காண்டாக்ட் இல்லை, அவர் ரொம்ப நல்லவரா இருக்கார் என்று மீனாவிடம் சொல்கிறார். மீனாவின் வீட்டிற்கே முருகன் சென்று பெண் கேட்ட விஷயமெல்லாம் தெரிந்தால் வித்யா எப்படி ரியாக்ட் செய்வார் என்பது ஆவலைத் தூண்டுகிறது.

மீனாவிடம் வித்யா சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை மறைந்திருந்து பார்க்கும் ரோகிணி கடுப்பாகிறார்.

Siragadikka aasai

மீனா கிளம்பியதும் வித்யாவிடம் சென்று, 'மீனாவிடம் அப்படி என்ன பேச்சு?' என்று கடிந்துக் கொள்கிறார். ரோகிணி நெருங்கிய தோழியாக இருந்தாலும் தன் காதல் விவகாரத்தை அவரிடம் சொல்லாமல் வித்யா தவிர்ப்பது ஏன் என்பது கேள்விக்குறி.

ரோகிணி மீனாவிடம் நெருங்கிப் பழக வேண்டாம் என வித்யாவை எச்சரிக்கிறார். நான் தான் உன் பெஸ்ட் பிரண்ட் என்று குழந்தை போல கோவப்படுகிறார் ரோகிணி.

முத்து டிராஃபிக் போலீஸ் அருணை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட அந்த வீடியோ வைரலாகிறது. ஸ்டிரிக்ட் ஆஃபிசரான அருண் ஹெல்மெட் அணியாமல் போன் பேசிக் கொண்டே பைக்கில் வந்த விஷயம் மேலதிகாரிகளுக்குத் தெரிந்து அவரை மூன்று நாட்கள் பணியிடை நீக்கம் செய்கின்றனர்.

முத்து மீது செம்ம கடுப்பில் இருக்கும் அருண் கோவமாக வீட்டிற்குக் கிளம்புகிறார். அருணின் வீட்டிற்குச் சீதா வருகிறார்.

சீதா அருணின் அம்மாவிடம் நலம் விசாரிக்கிறார். அருண் சீக்கிரமே பணியில் இருந்து வந்ததை அறிந்த சீதா அவரை அழைத்து பேசுகிறார். சீதாவிடம் அருண் தன் பணியிடத்தில் பிரச்னை ஏற்பட்டுவிட்டது என்கிறார். அதோடு நேற்றைய எபிசோட் முடிகிறது.

நாளுக்கு நாள் சீதா - அருணின் நட்பு ஆழமாகிறது. அருண் நேர்மையான அதிகாரி என்பது போல் காட்டப்படுகிறது. ஆனால் வேண்டுமென்றே அவரைச் சிக்க வைத்திருக்கும் முத்துவால் அவர் எப்படி மாறுவார்? சீதாவுடனான நட்பு காதலாகுமா? ரோகிணியைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிய முத்துவுக்கு உதவுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

``காதல் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது!'' -திருணம் குறித்து மனம் திறக்கும் பாவ்னி!

பிக் பாஸ் வீட்டில் காதலை தொடங்கி, கடந்த 2023-ம் ஆண்டு காதலர் தினத்தன்று தங்களின் காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக அமீர் - பாவ்னி ஜோடி அறிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்தாண்டு காதலர் தினத்தன்று தங... மேலும் பார்க்க

7 முதல் 3 மணி வரை விடாத போன் கால்; ஓட்டமெடுத்த தேர்தல் அலுவலர்; செய்தி வாசிப்பாளர் சங்கப் பஞ்சாயத்து

சுமார் 500 பேர் உறுப்பினர்களாக இருக்கும் தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் இம்மாதக் கடைசியில் நடக்கவிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.தேர்தல் நடத்தும் ... மேலும் பார்க்க

Siragadikka aasai : வீண் வம்பு, ஈகோ யுத்தம் - அருணை வீடியோ எடுத்த முத்து!

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவுக்கு எதிராக அருண் கதாபாத்திரமும் மீனாவுக்கு எதிராக சிந்தாமணியும் அறிமுகப்படுத்தப்பட்டனர். சிந்தாமணி விஜயாவின் நடனப்பள்ளியில் இணைந்து மீனாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

Kayal Serial: ஒரு வருடத்திற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் தேவி; வளைகாப்பு குறித்து ரசிகர்கள் கேள்வி

கயல் சீரியலில் தேவிக்கு வளைகாப்பு நடத்தக் கயல் ஏற்பாடு செய்கிறார். ஆனால் தேவியின் கணவர் தாயின் பேச்சைக் கேட்டு வளைகாப்புக்கு வர மறுக்கிறார்.கயல் தன் தங்கை தேவியின் கணவர் விக்னேஷை எப்படியாவது சமாதானப்ப... மேலும் பார்க்க

Lollu Sabha Udhaya: `அப்பாவுக்கு சர்ஜரி பண்ணி இடது கால் எடுத்துட்டோம்!' - உதயாவின் மகள்

சந்தானத்தின் பல காமெடி வசனங்களை எழுதியவர் நடிகர் சிரிக்கோ உதயா.இவர் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர். நடிப்பை தாண்டி இவர் இசையின் பக்கமும் கவனம் செலுத்தியிருக்கிறார். சினிமாவை த... மேலும் பார்க்க

Manimegalai : `தொகுப்பாளினியாக மீண்டும் களமிறங்கும் விஜே மணிமேகலை... குவியும் வாழ்த்துகள்!'

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நடன நிகழ்ச்சி `டான்ஸ் ஜோடி டான்ஸ்'. இதன் அடுத்த சீசன் விரைவிலேயேதொடங்க இருக்கிறது. மெகா ஆடிஷன் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தநி... மேலும் பார்க்க