ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா நிதானம்!
திடீர் குழந்தை இழப்பு சிண்ட்ரோம்: பச்சிளம் குழந்தைகளை எந்த பொஸிஷனில் தூங்க வைக்கலாம்? | Child Care
குழந்தைகளைத் தூங்க வைக்கும் சரியான பொஸிஷன்கள் எவை, தவிர்க்க வேண்டிய பொஸிஷன்கள் எவை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
திடீர் குழந்தை இழப்பு சிண்ட்ரோம் (SIDS - Sudden infant death syndrome), பெரும்பாலும் தூக்கத்திலேயே நிகழ்கிறது.
அறிகுறிகள் அற்ற, காரணங்கள் அறியப்படாத இந்த நோய்க்குறியால், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
பெரும்பாலும் குளிர் காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் இந்த ஆபத்து, ஆண் குழந்தைகளிடையே அதிகமாகக் காணப்படுகிறது.
அதைத் தடுக்க, குழந்தைகளைச் சரியான நிலையில் (பொஸிஷன்) தூங்க வைப்பது அவசியம் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் வி.சுரேஷ்.

குழந்தைகள் சமதளத்தில் மல்லாந்து, கை, கால்களை விரித்தபடி உறங்குவதே சரியான நிலை. இந்த நிலையில், திடீர் குழந்தை இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் வரை குறைக்கும்.
குழந்தைகள் வாய் மற்றும் வயிற்றுப்பகுதிக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் குப்புறப்படுப்பது, தவறான நிலை. இந்த நிலையில், குழந்தை சுவாசித்த காற்றையே மீண்டும் உள்ளிழுக்க நேரிடும்.
மேலும், மென்மையான விரிப்புகளில் தூங்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படக்கூடிய வாய்ப்பும் உண்டு. குழந்தை இழப்புக்கு முக்கியக் காரணி இதுதான்.

குழந்தை ஒருக்களித்துப் படுக்கும்போது, அது எந்த நேரத்திலும் குப்புறச் செல்லும் வாய்ப்புகள் அதிகமாகிறது என்பதால், இதுவும் தவிர்க்க வேண்டிய நிலையே.
* குழந்தையை மெத்தை, வாட்டர் பெட், சோஃபா போன்றவற்றில் பெற்றோர் கண்காணிப்பின்றி தனியாகத் தூங்கவைத்து விட்டுச் செல்வது.
* குழந்தையை முகம் புதையும் அளவுக்கு மென்மையான விரிப்புகளில் படுக்கவைப்பது. தூங்கும்போது அதன் அருகில் பஞ்சு போன்ற சாஃப்ட் டாய்ஸ் வைப்பது.

* குழந்தை தூங்கும்போது முகத்தை டவல், பெட்ஷீட் போன்றவற்றால் மூடி, மூச்சுத் திணறலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது.
* அம்மாவின் தன்னிலை மறந்த தூக்கம் அல்லது அப்பாவின் போதைப் பழக்கத்தால், இரவில் அருகில் உறங்கும் குழந்தையின் மேல் கை, கால், உடலைக் கிடத்தி, அதன் மூச்சுக்கு இடையூறு ஏற்படுத்துவது.
* குழந்தைக்கு அருகில் யாரேனும் புகைப்பது.
* பச்சிளம் குழந்தைகள் கட்டிலிலோ, தொட்டிலிலோ ஒருக்களித்தோ, குப்புறவோ உறங்கினால் பெற்றோர் அதைக் கவனித்து, மல்லாந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.
* தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்குத் திடீர் குழந்தை இழப்பு சிண்ட்ரோம் நேர்வதில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, கட்டாயம் தாய்ப்பால் புகட்ட வேண்டும்.
* அந்தந்த மாதங்களில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய தடுப்பு மருந்துகளைக் கொடுப்பது, திடீர் குழந்தை இழப்பு சிண்ட்ரோம் வாய்ப்பைக் குறைக்கிறது.

* குப்புற விழுந்து பழகிய பின், ஐந்து, ஆறு மாதங்களில், குழந்தை பொதுவாகக் குப்புறப் படுத்து தூங்கும் நிலைக்குதான் செல்லும். குழந்தை விழித்திருக்கும்போதே சிறிது நேரம் அதைப் குப்புறப்படுக்க வைத்து, அந்நிலையில் சுவாசம் தடைப்படாதவாறு அது தன் தலையை, முகத்தை வைத்துக்கொள்ளப் பழக்கலாம்.
இதனால், தூக்கத்தில் குப்புற விழுந்தாலும், மூச்சுத்திணறல் நேராமல் அது தன்னைக் காத்துக்கொள்ளப் பழகும்.
* மிகவும் மிருதுவான தொட்டில்கள், குழந்தை விரிப்புகள் தவிர்த்து, அழுத்தமான சமதளத்திலேயே குழந்தையைத் தூங்க வைக்கவும். தூளியில் தூங்க வைப்பதும் சிறந்தது.
* குழந்தைக்குச் சௌகர்யமான பருத்தியால் ஆன, டிசைன், பட்டன்கள் அழுத்தாத உடைகளாக அணிவித்துவிடும்போது, தூக்கத்தில் அது அசௌகர்யத்தால் நிலை மாறிப் படுப்பது தவிர்க்கப்படும்.
* ஒரே அறையில், பெற்றோரின் கண்காணிப்பில் குழந்தை தூங்க வேண்டும். ஆனால், குறைந்த பட்சம் நான்கு மாதங்கள் வரையிலாவது பெற்றோரின் அருகில் உறங்க வைப்பதைத் தவிர்த்து, தொட்டிலில் தூங்க வைக்கலாம்.

* உடலின் வெப்பத்தை அதிகரிக்கக் கூடிய சிந்தெடிக் உடைகள், மெத்தைகள், படுக்கை விரிப்புகளைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும்.
* குழந்தைகள் கையை மூக்கு, முகம் மேல் வைத்துப் படுக்கும்போது, அதை எடுத்துவிட வேண்டும்.
* தலையணைகள், பக்கவாட்டுத் தடுப்புகள் தவிர்க்க வேண்டும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR