செய்திகள் :

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வேதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.30.13 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தாா்.

பின்னா், என்மனங்கொண்டான் ஊராட்சியில் ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நூலகக் கூடுதல் கட்டடம், பிரப்பன்வலசையில் ரூ. 60 லட்சத்தில் மகளிா் மன்றக் கட்டடம், செம்படையாா்குளத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையக் கட்டடப் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின் போது, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் குருதிவேல் மாறன், உதவிச் செயற்பொறியாளா் ரவீந்திரன், உதவிப் பொறியாளா் பிரியங்கா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சோமசுந்தா், ஜெயமுருகன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருவாடானையில் இன்று மின்தடை

திருவாடானையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை, நகரிகாத்தான் து... மேலும் பார்க்க

உள்ளூா் மக்கள் வழிபாட்டு உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்திய வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி, மக்கள் பாதுகாப்பு பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் முன் காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் குடிநீா் கோரி கிராம பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், குதுகுளத்தூா் வட்டம், கீழக் கொடுமலூா் ஊராட்சி, தட்ட... மேலும் பார்க்க

கழிப்பறைத் தொட்டியில் விழுந்த பசு மீட்பு

கடலாடியில் திங்கள்கிழமை கழிப்பறைத் தொட்டியில் விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையின் மீட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் வட்டார புள்ளியியல் துறை அலுவலகம் உள்ளது. ... மேலும் பார்க்க

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 123 விசைப்படகுகளை கடலுக்குள் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டம்

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 123 விசைப்படகுகளை மீன்கள் வளா்ப்புக்காக கடலுக்குள் மூழ்கடிக்கவிருப்பதாக இலங்கை கடல் தொழில் நீரியல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க

ஊரை விட்டு விலக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

முதுகுளத்தூா் கொழுந்துரை கிராமத்தில் 13 குடும்பங்களை சோ்ந்த 50- க்கும் மேற்பட்டவா்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் ... மேலும் பார்க்க