செய்திகள் :

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 24 கடைகளை இடிக்க நோட்டீஸ்! வியாபாரிகள் அதிருப்தி

post image

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சாளர மேற்கூரை சேதமடைந்ததற்காக 24 கடைகளையும் இடித்து புதிய கடைகள் கட்டும் மாநகராட்சியின் முடிவு வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி காமராஜா் பேருந்து நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகக் கட்டப்பட்ட 34 கடைகள் ஏலம் விடப்பட்டு, சம்பந்தப்பட்டவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில், பேருந்து நிலையத்தின் வடக்குப் பகுதியிலுள்ள 24 கடைகளை இடிப்பதற்கான குறிப்பாணை (நோட்டீஸ்) சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு விநியோகிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தொடங்கியது. ஏ பகுதியில் 12 கடைகள், பி பகுதியில் 12 கடைகள் என மொத்தம் 24 கடைகளும், பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள நடைபாதைகளின் மேற்கூரைகளும் சேதமடைந்த நிலையில் உள்ளன.

எனவே, இந்தக் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, இந்த இடத்தில் புதிதாக நவீன வணிக வளாகம் கட்டுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளதால், கடைகளை காலி செய்து 30 நாள்களுக்குள் மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வியாபாரிகள் அதிருப்தி: இதுதொடா்பாக வியாபாரிகள் கூறியதாவது: கடைகளின் முன் பகுதியிலுள்ள சாளர மேற்கூரை மட்டுமே சேதமடைந்துள்ளன. கடைகளின் கட்டுமானத்தில் எந்த விரிசலும், சேதமும் ஏற்படவில்லை. ஆனாலும், கட்டுமானம் சேதமடைந்திருப்பதாகக் கூறி, காலி செய்ய அறிவுறுத்தி குறிப்பாணை விநியோகிக்கப்படுகிறது.

கட்டுமானம் குறித்து பொதுப் பணித் துறையிடமிருந்து உறுதிச் சான்று பெற்ாகத் தெரியவில்லை. கட்டடம் கட்டுவதற்கான நிதி ஆதாரம் குறித்தும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே, பொது ஏலம், வாடகை, குத்தகை இனங்கள் மூலம் மாநகராட்சிக்குக் கிடைக்கும் வருவாய் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், 24 கடைகளை இடித்தால் உடனடியாக கட்டுமானப் பணிகள் தொடங்குமா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே பூச் சந்தை வணிக வளாகத்தை இடிப்பதற்கும் குறிப்பாணை வழங்கப்பட்டது. அந்த இடத்திலேயே முழுமையாக பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்த 24 கடைகளின் முன்பாக உள்ள சாளர மேற்கூரைகளை மட்டும் சீரமைத்தாலே போதுமானதாக இருக்கும். இங்குள்ள கடைகளை இடிப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

ரூ.30 லட்சம் வருவாய் இழப்பு: ஏ, பி,. பகுதியிலுள்ள 24 கடைகள் மூலம் மாநகராட்சிக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.3 லட்சம் வீதம், ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வருவாய் கிடைக்கிறது.

திண்டுக்கல்-பழனி புறவழிச் சாலை அருகே புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் காமராஜா் பேருந்து நிலையத்திலுள்ள 24 கடைகளை இடிப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் அவசரம் காட்டுவது ஏன் எனத் தெரியவில்லை என்றனா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க