செய்திகள் :

திப்பிறமலை - ஈத்தங்காடு சாலையை ரூ.68 லட்சத்தில் சீரமைக்கும் பணி

post image

கருங்கல் அருகே உள்ள திப்பிறமலை - ஈத்தங்காடு சாலை ரூ.68 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி தொடக்கம் பணியினை கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ் குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று எம்எம்ஏவின் முயற்சியால், நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கண்டநநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து சாலைப் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.

இதில், கிள்ளியூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் இராஜசேகரன், திப்பிறமலை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் பிறைட் உள்ளிட்ட பொது மக்கள் பலா் பங்கேற்றனா்.

275 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோயிலில், 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் அடையாளமாக விளங்கும் பத்மநாபசுவாமி ... மேலும் பார்க்க

குழித்துறையில் கனரக லாரி மோதியதில் தொழிலாளி பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை அருகேயுள்ள அஞ்சாங்கோடு பகுதியைச... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா, நவ... மேலும் பார்க்க

கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே மோதிரமலை கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் மீண்டும் காட்டு யானை வெள்ளிக்கிழமை இரவு புகுந்ததால் பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனா். குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ம... மேலும் பார்க்க

தக்கலை அருகே தலைமை ஆசிரியரிடம் ரூ.36 லட்சம் மோசடி: தம்பதி கைது

தக்கலை அருகே காட்டாத்துறையில் நிலம் விற்பதாகக் கூறி தலைமை ஆசிரியரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காட்டாத்துறை குருவிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அருள் சக... மேலும் பார்க்க

திருவிதாங்கோட்டில் பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி தக்கலை அருகேயுள்ள திருவிதாங்கோட்டில் சனிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருவிதாங்கோட்டில், பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ச... மேலும் பார்க்க