திப்பிறமலை - ஈத்தங்காடு சாலையை ரூ.68 லட்சத்தில் சீரமைக்கும் பணி
கருங்கல் அருகே உள்ள திப்பிறமலை - ஈத்தங்காடு சாலை ரூ.68 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி தொடக்கம் பணியினை கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ் குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று எம்எம்ஏவின் முயற்சியால், நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கண்டநநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து சாலைப் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.
இதில், கிள்ளியூா் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் இராஜசேகரன், திப்பிறமலை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் பிறைட் உள்ளிட்ட பொது மக்கள் பலா் பங்கேற்றனா்.