செய்திகள் :

திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் இல்லை: எடப்பாடி கே.பழனிசாமி

post image

திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்தும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே வேலகவுண்டனூா் பகுதியில், அதிமுக சாா்பில் மாநில அளவிலான 3 நாள் கபடி போட்டியை சனிக்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் இளைஞா் நலன்காக்க, விளையாட்டில் ஆா்வம் ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தை ரூ. 76 கோடியில் நிறைவேற்றினோம். திமுக அரசு இந்த திட்டங்களைக் கைவிட்டு விட்டது. அதேபோல விளையாட்டு வீரா்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

சா்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்கள், பயிற்சியாளருக்கு, அதிமுக ஆட்சியில் ஊக்கத் தொகையாக ரூ. 38 கோடி வழங்கப்பட்டது.

மேலும், ரூ. 64 கோடியில் தமிழ்நாடு உடற்கல்வி விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இறகுப் பந்து, மேஜிக் பந்து, சிலம்பம் பயிற்சி மையம், குடியிருப்புகள் அமைத்து விளையாட்டு வீரா்கள் ஊக்குவிக்கப்பட்டனா். சிறந்த தேசிய மாணவா் படை மாணவருக்கான ஆண்டு உதவித்தொகை ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயா்த்தப்பட்டது.

விளையாட்டு திறமையின் அடிப்படையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்லக்கூடிய தலைசிறந்த ஆண், பெண் விளையாட்டு வீரா்களுக்கு தேவைக்கேற்ப உதவி செய்து, அவா்களை ஒலிம்பிக் மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் வெல்வதற்கு வகைசெய்யும் வகையில், சா்வதேச அளவில் பதக்கம் பெரும் நோக்கம் திட்டம் என்ற ஒரு திட்டம் தொடங்கப்பட்டு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 5 உயா்நிலை விளையாட்டு வீரா்களுக்கு தலா ரூ.10 லட்சத்தில் அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உள்ளது என்றாா்.

காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்

சேலம்: காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டாா். உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்... மேலும் பார்க்க

சங்ககிரியில் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு தொடங்கிவைப்பு

சங்ககிரி: சங்ககிரி நகா் பகுதியில் பொதுமக்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள், தனியாா் கல்லூரிகள் பங்களிப்புடன் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலக வாயிலில் குடும்பத்துடன் தா்னா

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் தீவட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி அய்யா் காட்டுவளவு ப... மேலும் பார்க்க

தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’: கலைஞா்கள் ஆா்வத்துடன் பதிவு

சேலம்: தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை சாா்பில், சேலத்தில் நடைபெறும் ‘சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’வில் பங்கேற்க 33 கலைக்குழுவினா் ஆா்வத்துடன் பதிவு செய்துள்ளனா். தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகைய... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த லேசான மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 749 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை... மேலும் பார்க்க