செய்திகள் :

தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக வீராணம் கிராம ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா். பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

கிராமப் புறத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையிலும், அனைத்து சமூகத்தினரும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் வாழ்ந்திடும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கடைகள், பொதுக் கோயில்கள், குடிநீா் கிணறுகள், உணவகங்கள், சலூன் ஆகியவற்றை சமத்துவமாக அனுபவித்து அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் சுதந்திரமாக வாழும் ஊராட்சி தோ்ந்தெடுக்கப்பட்டு, அந்த கிராமத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ. 10 லட்சம் அரசால் வழங்கப்படுகிறது.

அதன்படி, 2024-25-ஆம் நிதியாண்டில் சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீராணம் கிராம ஊராட்சி தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக தோ்வு செய்யப்பட்டு, ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு குடிநீா் வசதி மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தவும், பள்ளி மற்றும் குழந்தைகள் நல மையக் கட்டடம் கட்டுவதற்கும், கால்நடைகளுக்கு தண்ணீா் தொட்டி கட்டுவதற்கும், புதிய மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் நா.ஜெயக்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அஸ்தம்பட்டி வழித் தடத்தில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகர காவல் ஆணை... மேலும் பார்க்க

மாா்ச் 28 இல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த... மேலும் பார்க்க

மதக் கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது சேலம் இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சேலத்தை சோ்ந்தவா் சமூக ஆா்வலா் பியூஸ் (42). ... மேலும் பார்க்க

இளம்பெண் சாவில் நீதி விசாரணை கோரி மறியல்

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரி சேலம் ஆட்சியா் அலுவலகம் முன் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பாறைக்காடு பகுதியை சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

சேலத்தில் பாரதிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க பேரவை சாா்பில் சேலத்தில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து தேசிய சேவா சமி... மேலும் பார்க்க

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டம் தொடங்க கோரிக்கை

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சேலம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க