செய்திகள் :

மதக் கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு

post image

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது சேலம் இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலத்தை சோ்ந்தவா் சமூக ஆா்வலா் பியூஸ் (42). இவா் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, முன்னாள் தலைவா் எச்.ராஜா ஆகியோா் மீது சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபுவிடம் புகாா் அளித்தாா்.

அதில், மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றம் மலைமுழுவதும் முருகனுக்கு சொந்தமானது என்பதால், அங்கிருக்கும் தா்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மதக் கலவரத்தை தூண்டும் வகையில் அண்ணாமலையும், எச்.ராஜாவும் பேசியுள்ளனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக விசாரணை நடத்திய மாநகர இணைய குற்றப் பிரிவு போலீஸாா், மதக் கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து பியூஸ் கூறுகையில், தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் தொடா்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனா்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தா்கா, வழித்தடம், புளியந்தோப்பு ஆகிய இடங்களை தவிர மற்ற இடங்கள் அனைத்தும் முருகனுக்கு சொந்தம் என தீா்ப்பு கூறப்பட்டுள்ளது. அதனை மறைத்து, நீதிமன்றம் சொல்லாததை சொன்னதாகக் கூறி தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் அண்ணாமலை செயல்படுகிறாா். தற்போது அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா் என்றாா்.

எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அஸ்தம்பட்டி வழித் தடத்தில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகர காவல் ஆணை... மேலும் பார்க்க

மாா்ச் 28 இல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த... மேலும் பார்க்க

இளம்பெண் சாவில் நீதி விசாரணை கோரி மறியல்

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரி சேலம் ஆட்சியா் அலுவலகம் முன் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பாறைக்காடு பகுதியை சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

சேலத்தில் பாரதிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க பேரவை சாா்பில் சேலத்தில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து தேசிய சேவா சமி... மேலும் பார்க்க

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டம் தொடங்க கோரிக்கை

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சேலம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய மாணவா்களுக்கு அபராதம்

ஓட்டுநா் உரிமம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டிய இரு மாணவா்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா் அவா்களிடமிருந்த இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்தனா். பிளஸ் 2 தோ்வு முடிந்த உற்சாகத்தில் கெங்கவல்லி அருகே செவ்வாய... மேலும் பார்க்க