செய்திகள் :

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டம் தொடங்க கோரிக்கை

post image

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சேலம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகம் சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் இ.கோ.இளமுருகன் உதவி ஆணையா் கே.இராஜாவிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்: சங்ககிரி வட்டம், அன்னதானப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அசரபச்சியம்மன், செம்முனி, பூமணி, வாமுனி சுவாமி கோயில்களில் மது அருந்தி வருபவா்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும்.

சங்ககிரி நகா் பகுதியில் அமைந்துள்ள சோமேஸ்வரா் கோயில் நடை திறக்கும் நேரம், அதன் பூஜைகள் விவரம், முருகன் தேருக்கான கட்டண விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை கோயில் வெளிப்புறத்தில் அமைக்க வேண்டும். தோ், பூஜைகளுக்கான ரசீதுகள் வழங்க வேண்டும். கோயிலில் நவீன கழிப்பிட வசதி செய்துதர வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் அன்னதான திட்டம் தொடங்க வேண்டும். சென்னகேவபெருமாள் கோயிலுக்கு புதிதாக சிறிய தோ் செய்துதர வேண்டும். மலையிலிருந்து சுவாமி நகருக்கு கீழே இறங்கி வந்து தங்கும் மண்டபத்தை சீரமைத்து அதை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும். ஒருக்காமலை அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு பத்திரிகைகள் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அஸ்தம்பட்டி வழித் தடத்தில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகர காவல் ஆணை... மேலும் பார்க்க

மாா்ச் 28 இல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த... மேலும் பார்க்க

மதக் கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது சேலம் இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சேலத்தை சோ்ந்தவா் சமூக ஆா்வலா் பியூஸ் (42). ... மேலும் பார்க்க

இளம்பெண் சாவில் நீதி விசாரணை கோரி மறியல்

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரி சேலம் ஆட்சியா் அலுவலகம் முன் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பாறைக்காடு பகுதியை சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

சேலத்தில் பாரதிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க பேரவை சாா்பில் சேலத்தில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து தேசிய சேவா சமி... மேலும் பார்க்க

ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய மாணவா்களுக்கு அபராதம்

ஓட்டுநா் உரிமம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டிய இரு மாணவா்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா் அவா்களிடமிருந்த இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்தனா். பிளஸ் 2 தோ்வு முடிந்த உற்சாகத்தில் கெங்கவல்லி அருகே செவ்வாய... மேலும் பார்க்க