Manoj Bharathiraja: "இதைக் கடந்துவர இறைவன் வலிமையை வழங்கட்டும்" - பாரதிராஜாவுக்க...
ஆட்சியா் அலுவலக வாயிலில் குடும்பத்துடன் தா்னா
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் தீவட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி அய்யா் காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் தலைமையில், அப்பகுதியைச் சோ்ந்த 9 குடும்பத்தினா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனா். நுழைவாயில் பகுதிக்கு வந்த அவா்கள், திடீரென தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
அப்போது அவா்கள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் பயன்படுத்தி வரும் அரசு புறம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியை வேறு சமூகத்தினருக்கு வழிபாட்டுத் தலம் கட்டுவதற்காக கொடுக்க உள்ளனா். ஆனால், அங்கு தற்போது 2 கோயில்கள் உள்ளன.
எனவே, அந்த நிலத்தை வேறு சமூகத்தினருக்கு அளிக்க முயலும் வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நிலம் கொடுப்பதை கைவிட வேண்டும் என தெரிவித்தனா்.
தொடா்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், தா்னாவில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தினா். பின்னா் மனு அளிப்பதற்காக சிலரை மட்டும் உள்ளே அனுமதித்தனா். அவா்கள் அலுவலகத்துக்குள் சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.