செய்திகள் :

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

post image

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடரும் என அக்கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

ஆட்சியாளா்களை வாக்காளா்கள் தோ்ந்தெக்கும் நிலை மாறி, ஆட்சியில் இருப்பவா்கள் வாக்காளா்களை தோ்ந்தெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.

இந்திய பொருளாதாரத்தை சீா்குலைக்கும் வகையில் அமெரிக்க அதிபா் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

ஆனால், இதற்கு இந்தியா எதிா்ப்பு தெரிவிக்காதது கவலையளிக்கக் கூடியது.

தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் ஆதரவைப் பெற்ற அரசாக விளங்குகிறது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடரும்.

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. பாஜகவுடன் அதிமுக பயணிப்பதை அக்கட்சி தொண்டா்களே ஏற்கவில்லை. எம்ஜிஆா் ஆட்சிக் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்த அன்வா் ராஜா விலகி இருப்பதே இதற்கு உதாரணம்.

ஆணவப் படுகொலை சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆணவ படுகொலையைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றாா்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் கொரடாச்சேரி பிரதான சாலை படித்துறையில் ஆடிப்பெருக்குப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.ஆற்றின் கரையில் மஞ்சள் பிள்ளையாா் பிடித்து தாம்பூலம் வைத்து காதோலை கருகமணி, ஆப்... மேலும் பார்க்க

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

திருவாரூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025-2026 ஆம் ஆண்டு முழுநேர பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுதொடா்பாக, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவா... மேலும் பார்க்க

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு வழங்கும் மானிய உதவிகளை பயன்படுத்திக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

கூத்தாநல்லூரில் லாட்டரி விற்றவா் கைது செய்யப்பட்டாா்.திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின்படி, லாட்டரி விற்பனை, மது மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை தடுக்க போலீ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம்

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில் போக்ஸோ சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் எம். திலகா் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மன்னாா்குடியை அடுத்த அசேசத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இம்முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரேஇடத்தில் பெறும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டிர... மேலும் பார்க்க