செய்திகள் :

திமுக கூட்டணி உடையும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

post image

திமுக கூட்டணி உடையும்; அந்த கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறவுள்ளன என்று மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிலத்தடி நீருக்கு வரி விதிப்பது என்பது திரிக்கப்பட்ட, தவறான செய்தி. இது குறித்து ஜல் சக்தி துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதில் தண்ணீருக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி உடையும் நிலையில் உள்ளது. அந்த கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறவுள்ளன.

அதேவேளையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன. இதுகுறித்து பாஜக தேசிய தலைவா்கள் முடிவு செய்வாா்கள்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மீதான ஆ.ராசாவின் கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது. ஆ. ராசா மீது முதல்வா் மு. க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் 2026-இல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்கு அதிமுக தலைமை வகிக்கும் என பாஜக தேசிய தலைவா்கள் ஏற்கெனவே கூறிவிட்டாா்கள் என்றாா் மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.

பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் நடைமுறைக்கு வந்தது!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் இன்று(திங்கள்கிழமை) அமலுக்கு வந்தது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜூன் 30) தொடக்கிவைத்தார். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின... மேலும் பார்க்க

செல்போன் சார்ஜிங் வசதி, சீட் பெல்ட்... சென்னை மின்சாரப் பேருந்தின் சிறப்பம்சங்கள்!

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகளில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சாரப் பேருந்துகள... மேலும் பார்க்க

தில்லியில் அன்புமணி! யாருடன் சந்திப்பு?

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தில்லிக்குச் சென்றார்.பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போா் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பொதுவெளியில் ஒருவரை ஒருவா் ம... மேலும் பார்க்க

ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வைப் போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகின்றன: ஆர்.பி.உதயகுமார்

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வைப் போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்... மேலும் பார்க்க

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்!

சென்னை: தமிழகத்தில் கலை, அறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.பள்ளியிலிருந்து விடைப... மேலும் பார்க்க