உ.பி.யில் வாக்குவாதத்தில் காவலரை சுட்டுக்கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்
திமுக கூட்டணி உடையும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்
திமுக கூட்டணி உடையும்; அந்த கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறவுள்ளன என்று மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.
சென்னை ஆழ்வாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிலத்தடி நீருக்கு வரி விதிப்பது என்பது திரிக்கப்பட்ட, தவறான செய்தி. இது குறித்து ஜல் சக்தி துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதில் தண்ணீருக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி உடையும் நிலையில் உள்ளது. அந்த கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறவுள்ளன.
அதேவேளையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன. இதுகுறித்து பாஜக தேசிய தலைவா்கள் முடிவு செய்வாா்கள்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மீதான ஆ.ராசாவின் கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது. ஆ. ராசா மீது முதல்வா் மு. க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் 2026-இல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்கு அதிமுக தலைமை வகிக்கும் என பாஜக தேசிய தலைவா்கள் ஏற்கெனவே கூறிவிட்டாா்கள் என்றாா் மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.