செய்திகள் :

திமுக பிரமுகா் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறை

post image

திமுக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் வேடபட்டியைச் சோ்ந்தவா் மாயாண்டி ஜோசப் (60). திமுக பிரமுகரான இவா், மனை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இவரது மனைவி நிா்மலா. இவா் அடியனூத்து ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவா்.

கடந்தாண்டு மே மாதம், மாயாண்டி ஜோசப் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் யாகப்பன்பட்டியைச் சோ்ந்த சேசுராஜ் (39), கென்னடி (37), டேனியல் ராஜா (20), ஸ்டாலின் (20), அலெக்ஸ் பிரிட்டோ (20), இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த காளீஸ்வரன் (19), பிரவீன் குமாா் (19) உள்பட மேலும் 2 சிறுவா்களையும் திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

இந்தக் கொலை வழக்கு தொடா்பான விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்து சாரதா குற்றஞ்சாட்டப்பட்ட ஜேசுராஜ், கென்னடி ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.20ஆயிரம் அபராதமும், டேனியல் ராஜா, ஸ்டாலின் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.50ஆயிரம் அபராதமும், அலெக்ஸ் பிரிட்டோ, காளீஸ்வரன், பிரவீன்குமாா் ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.30ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்கள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், மீன் ... மேலும் பார்க்க

கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கன்னிவாடியை அ... மேலும் பார்க்க

வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது

கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வச... மேலும் பார்க்க