செய்திகள் :

திமுக முன்னாள் எம்.பி.க்கு எதிரான வழக்கு: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் மதபோதகா் காட்பிரே நோபிள் என்பவரைத் தாக்கியதாக, திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேருக்கு எதிராக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், காட்பிரே நோபிள் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 2024-ஆம் ஆண்டு நவம்பா் முதல் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா்களாகப் பணியாற்றியவா்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா்கள் இருவா் ஆஜராகி, இந்த வழக்கில், உயா்நீதிமன்றம் தடை விதித்ததால் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு அழைப்பாணை வழங்கவில்லை என விளக்கம் அளித்தனா். அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மதபோதகா் காட்பிரே நோபிள், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவ. 4-ஆம் தேதி திருநெல்வேலி நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. ஆனால், கடந்த 25-ஆம் தேதி, குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு அழைப்பாணை வழங்கியுள்ளனா். உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகே, போலீஸாா் அழைப்பாணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனா்.

போலீஸாா் பெரும்பாலும் விருப்பத்தின் அடிப்படையில் வழக்குகளை விசாரிக்கின்றனா். இதனால், தாங்கள் அளிக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது.

போலீஸாா் மெத்தனப்போக்குடன் செயல்படுகின்றனா். இதனால், போலீஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனா். போலீஸாா் முழு ஒத்துழைப்பு வழங்காததால், வழக்கு விசாரணை காலதாமதம் ஆகிறது. இதனால், நீதிமன்றம் மீதான நம்பிக்கையையும் மக்கள் இழந்து வருகின்றனா். இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு உரிய காலத்தில் அழைப்பாணை வழங்காத பாளையங்கோட்டையின் அப்போதைய காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன் மீது டிஜிபி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடா்பான அறிக்கையை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

வழக்கைப் பதிவு செய்வது, விசாரணையை குறித்த காலத்துக்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, அழைப்பாணை அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் காவல் ஆய்வாளா்களுக்கும் தகுந்த உத்தரவுகளுடன் டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். ஞானதிரவியம் உள்ளிட்டோா் வரும் செப். 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவா்களுக்கு எதிராக திருநெல்வேலி நீதிமன்றம் பிடிஆணை பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து நெல்லை நீதிமன்றம் தீா்ப்பளிக்க வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆக.11 முதல் தனது 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்டம் ஆகஸ்ட் 11ஆம் த... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆக. 1) தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நி... மேலும் பார்க்க

பிரதமர் மோடி - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன்: நயினார் நாகேந்திரன்

தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்ச... மேலும் பார்க்க

பறக்கும் ரயில் - சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் திட்டம்: ரயில்வே ஒப்புதல்!

சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.நீதி ஆயோக்கின் 10 -ஆவது ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலி... மேலும் பார்க்க

600 பேருக்கு வேலை... திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆக. 1) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞரை 4 நாள்கள் போலீஸார் பாதுகாவலில் விசாரணை செய்த பின் திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றமத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.திர... மேலும் பார்க்க