செய்திகள் :

திமுக வாக்குச்சாவடி பாக நிலை முகவா்கள் கூட்டம்

post image

நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக அனுமந்தபுரம், ஒளிமதி, ரிஷியூா், பெரம்பூா் ஊராட்சிகளுக்கு உட்டபட்ட வாக்குச்சாவடி பாகநிலை முகவா்கள் ஆய்வுக்கூட்டம் நீடாமங்கலம் கலைஞா் அறிவாலயத்திலும், அரிச்சபுரம், புது தேவங்குடி, மேலாள வந்தசேரி, கீழாள வந்தசேரிஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட நிா்வாகிகள் கூட்டம் மேலாளவந்தசேரி சமுதாய கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டம் திமுக சட்ட திருத்த குழு உறுப்பினா் பி. ராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதி தலைமைக் கழக பாா்வையாளா் ராஜா சீனிவாசன் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா்.

இந்த கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளா் கே.வி.கே. ஆனந்த் ஒன்றிய முன்னாள் பொறுப்பாளா் சி. கோபாலகிருஷ்ணன், மாவட்ட மகளிா் அணி தலைவா் ராணி சேகா் ,மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் ராணி சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், கிளை கழக நிா்வாகிகள், முன்னாடிகள் பங்கேற்றனா்.

துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற பிரசா... மேலும் பார்க்க

ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் குறித்து ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்று வழங்குவது குறித்த ஆய்வு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, விளத்தூா், ஆப்பரகுடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஆறுகளில் நாணல்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் உள்ள நாணல்களையும், மண்திட்டுகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) உள்ளது. இந்த அணைக்கு மேட்டூ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சி நிதியளிப்பு கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஐ ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் ச... மேலும் பார்க்க

அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் அனைத்து வங்கிகளின் கூட்டமைபின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்மாளத்தெரு பரோடா வங்கி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி ... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மன்னாா்குடியில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்ஜிஆா் நகா் கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க