எதிர்நீச்சல் -2 தொடரிலும் நடிக்கும் இயக்குநர் திருச்செல்வம்!
திம்பம் மலைப்பாதையில் தென்பட்ட சிறுத்தை
சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை தென்படுவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத் துறை எச்சரித்து உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப் பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலவி வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு திம்பம் மலைப் பாதை 15-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வனப் பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று திம்பம் தடுப்புச் சாலையில் நடந்து சென்றது. இந்தக் காட்சியை அவ்வழியாக வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டி ஒருவா் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்தாா் .
கடந்த சில நாள்களாக திம்பம் மலைப் பாதையில் இந்தச் சிறுத்தை நடமாடுவதால் திம்பம் மலைப் பாதை வழியாகச் செல்லும் வாகனம் ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தவோ, வாகனத்தை விட்டு இறங்கவோ கூடாது எனவும், இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும் வனத் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.