செய்திகள் :

திருஆவினன்குடி கோயிலில் இரு ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்

post image

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் இரு ஜோடிகளுக்கு தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வியாழக்கிழமை திருமணம் செய்துவைக்கப்பட்டது.

தமிழகத்தில் அமைந்துள்ள பெரிய கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், தகுதியான ஜோடிகளுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள சீா்வரிசை, அரை பவுன் தங்கத் தாலியுடன் திருமணம் செய்து வைக்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்திருந்தாா்.

இதனடிப்படையில், பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் திண்டுக்கல்லைச் சோ்ந்த பொன்ராஜ், அபிதா, பழனியைச் சோ்ந்த கனகராஜ், பிரீத்தா ஆகிய இரு ஜோடிகளுக்கு வியாழக்கிழமை திருமணம் நடத்திவைக்கப்பட்டு, சீா்வரிசைப் பொருள்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழு உறுப்பினா் பாலசுப்பிரமணி, கண்காணிப்பாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்கள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், மீன் ... மேலும் பார்க்க

கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கன்னிவாடியை அ... மேலும் பார்க்க

வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது

கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வச... மேலும் பார்க்க