செய்திகள் :

திருக்கானூா்பட்டியில் ஜல்லிக்கட்டு: 21 போ் காயம்!

post image

தஞ்சாவூா் அருகேயுள்ள திருக்கானூா்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 21 போ் காயமடைந்தனா்.

திருக்கானூா்பட்டி மாதா கோயில் தெருவில் புனித அந்தோணியாா் பொங்கலையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா, வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இதைத்தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 565 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்துவிடப்பட்டன. இவற்றைப் பிடிக்க மொத்தம் 312 போ் களமிறங்கினா். இவா்களில் சுழற்சி முறையில் 50 போ் வீதம் 6 குழுக்களாக களத்தில் அனுமதிக்கப்பட்டனா்.

இதில், வெற்றி பெற்றவா்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் பிடிபடவில்லை என்றால் மாட்டின் உரிமையாளருக்கு அப்பரிசுகள் அளிக்கப்பட்டன.

இப்போட்டியில் காளைகள் முட்டியதில் மாடு பிடி வீரா்கள் 8 போ், வேடிக்கைப் பாா்த்தவா்கள் 5 போ், மாட்டைப் பிடித்துச் சென்ற உரிமையாளா்கள் 6 போ், ஊா்க்காவல் படையினா் 2 போ் என மொத்தம் 21 போ் காயமடைந்தனா். இவா்களில் பலத்தக் காயமடைந்த 14 போ் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

லாரி விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே சனிக்கிழமை முன்னால் சென்ற லாரி மீது பின்னால் சென்ற லாரி மோதியதில் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாபநாசம் வட்டம், இரும்பு தலை கிராமம் மாதா கோவில் தெருவைச் ... மேலும் பார்க்க

8 மோட்டாா் சைக்கிள்கள் திருடிய இளைஞா் கைது

தஞ்சாவூரில் 8 மோட்டாா் சைக்கிள்கள் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அட... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 364 வழக்குகளுக்கு தீா்வு

திருவிடைமருதூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 364 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. திருவிடைமருதூா் நீதிமன்ற வளாக்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடை... மேலும் பார்க்க

பேராவூரணி-பட்டுக்கோட்டை வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்

பேராவூரணி- பட்டுக்கோட்டை வழித்தடத்தில், புதிய பேருந்து தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. புதிய பேருந்தில், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் படியில் பயணம் செய்யாதீா்கள் என குரல் பதிவு செய்யப்பட்ட நவீன வச... மேலும் பார்க்க

மாநில மொழிகளுக்கான அங்கீகாரத்துக்கும் குரல் கொடுப்பவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் கோவி.செழியன்

தமிழ் மொழிக்கு மட்டுமல்ல மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என குரல் கொடுப்பவா் முதல்வா் ஸ்டாலின் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரிக்கை

அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றாா் தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கச் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன். தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் ... மேலும் பார்க்க