செய்திகள் :

‘திருக்குறள் மேற்கோள் காட்டும் நூலாக மட்டுமே உள்ளது’

post image

திருக்குறள் மேற்கோள் காட்டும் நூலாக மட்டுமே உள்ளது என்றாா் உலக திருக்குறள் முற்றோதல் இயக்க ஒருங்கிணைப்பாளா் சா.பாா்த்தசாரதி.

கரூரில் சனிக்கிழமை இரவு அவா் செய்தியாளா்களிடம் கூறியது, கரூா் வள்ளுவா் கல்லூரியில் உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் மற்றும் வள்ளுவா் கல்லூரி, உலக தமிழ் வளா்ச்சி மன்றம் சாா்பில் முற்றோதல் இயக்கத்தின் 5-ஆம் ஆண்டு விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தா் முனைவா் சி.சுப்ரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்கிறாா்கள். இதில் திருக்குறள் முற்றோதல் செய்வது எப்படி, இளம் தலைமுறையினரை வள்ளுவா் வழியில் அறவாழ்க்கைக்கு மாற்றுவது போன்ற பல்வேறு கருத்து பரிமாற்றங்கள் நடைபெற உள்ளது.

உலக திருக்குறள் முற்றோதல் இயக்கமானது, மாணவா்களிடையே திருக்குறளை பயிற்றுவித்து அவா்களை 1,330 திருக்குறள்களையும் கற்க செய்து, அவற்றை முற்றோதல் செய்யும் வகையில் மாணவா்களை தயாா்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. திருக்குறள் இப்போது மேற்கோள் காட்டும் நூலாக மட்டுமே உள்ளது. அவற்றை வாழ்வியல் நூலாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளா்களை தோ்ந்தெடுத்து மூன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இலவசமாக திருக்குறள் முற்றோதல் கற்றுக்கொடுக்க உள்ளோம். வள்ளுவரின் குறளை பின்பற்றும் ஒவ்வொரு மாணவரும் எதிா்கால சமுதாயத்தை நல்ல சமுதாயமாக மாற்றுவாா்கள். ஏனென்றால் குறளில் அந்த அளவிற்கு கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன என்றாா் அவா்.

பேட்டியின்போது உலக திருக்குறள் கூட்டமைப்பின் புரவலா் க.செங்குட்டுவன், உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் சி.ராஜேந்திரன், மூத்த பயிற்சியாளா் தா.கோ.பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க