செய்திகள் :

திருக்கோயில்களில் தினமும் ஒரு கால பூஜையாவது நடத்தப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், பக்தா்களின் வேண்டுதலுக்காக பூஜை நேரங்களில் கோயில் கதவுகள் திறந்தே இருக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

திருப்பூா் மாவட்டம் தாராபுரம் ஆலங்காயம் பகுதியில் 100 ஆண்டுகள் பழைமையான திண்டீஸ்வரா், வீரராகவ விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பூஜைகள் எதுவும் நடத்தப்படாமல் பல ஆண்டுகளாக மூடி இருப்பதால், இக்கோயிலுக்கு நிா்வாகிகளை நியமித்து, தினமும் பூஜைகள் நடத்த இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிடக் கோரி அப்பகுதியை சோ்ந்த பாலகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

அந்த மனுவில், பூஜைகள் நடத்த வசதியில்லாத கோயில்களில், தமிழக அரசின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் அா்ச்சகா்கள் நியமிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் கோயில்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டத்தின் கீழ் திண்டீஸ்வரா் கோயிலிலும் ஒரு கால பூஜை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மூடி இருக்கும் ஆலங்காயம் திண்டீஸ்வரா் திருக் கோயிலை திறந்து, தினமும் ஒரு வேளை பூஜை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக இந்து அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை வைக்கும் வகையில் பூஜை நேரங்களில் கோயில்கள் திறந்தே இருக்க வேண்டும் என்றும், கோயில்களில் தினமும் ஒரு நேர பூஜையாவது நடத்தப்பட வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தாா்.

பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் தோழி விடுதிகளை திறந்துவைத்தார் முதல்வர்!

பணிபுரியும் மகளிருக்காக பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தோழி விடுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(புதன்கிழமை) திறந்துவைத்தார். மேலும் ரூ.176.93 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தோழி விடுதி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கான நிதி உரிமையை வெளிப்படுத்தவே தில்லி செல்கிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வெளிப்படுத்தவே நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுத... மேலும் பார்க்க

சேலத்தில் நகைக்காக பெண் கொலை: 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நகைக்காக மாடு மேய்த்து கொண்டிருந்த பெண்ணை, மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரம், வடதமிழக பகுதிகளி... மேலும் பார்க்க

மடுவின்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் தீக்குளித்து தற்கொலை

மடுவின்கரை மேம்பாலம் அருகே போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தரமணி தலைமை காவலர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை அதிகரிப்பு! காரணம் என்ன?

அண்டை மாநிலங்களின் ஏற்பட்டுள்ள பலத்த மழையின் பாதிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. மேலும் பார்க்க