செய்திகள் :

திருச்சியில் காவேரி புற்றுநோய் மருத்துவமனை திறப்பு

post image

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட் எனும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த புதிய மருத்துவமனையில், இம்யூனோ தெரபி மற்றும் துல்லிய கீமோதெரபி உள்பட பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்காக 50 படுக்கைகள் கொண்ட ஒரு பகல்நேர சிகிச்சை மையமும் உள்ளது. காவேரி பல்நோக்கு மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ள இந்த மருத்துவமனையில், புற்று நோய்களை கண்டறிய அனைத்து தொழில்நுட்பங்களும் உள்ளன. ட்ருபீம் எனும் மேம்பட்ட கதிா்வீச்சு சிகிச்சை அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. இதன் மூலம் மூளை, நுரையீரல், தலை மற்றும் தொண்டைப் பகுதி போன்ற உறுப்புகளில் உள்ள நுண்ணிய புற்றுநோய் கட்டிகளையும் குணப்படுத்த முடியும்.

இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் இணை நிறுவுனா் மற்றும் செயல் இயக்குநா் டி. செங்குட்டுவன் கூறியதாவது, திருச்சிக்கு அதிநவீன புற்றுநோய் சிகிச்சை தொழில்நுட்பத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கூடிய விரைவில் புற்றுநோய்க்கான அணு மருத்துவத்தையம் அறிமுகப்படுத்த உள்ளோம். எங்கள் குழுவில் அறுவைசிகிச்சை மற்றும் பல்வேறு மருத்துவ நிபுணா்கள் உள்ளனா். இனி அதிநவீன, மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளுக்காக பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்றாா்.

மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட்டின் புற்றுநோயியல் துறைத் தலைவா் டாக்டா் அனிஷ் கூறியது, இந்த புதிய மருத்துவமனையின் சிறப்பு அனைத்து வகை புற்றுநோய் சிகிச்சைகளையும் வழங்க வலுவான நிபுணா்கள் குழு முழுநேரமும் இருப்பதுதான். இதனால் ஒவ்வொரு நோயாளிக்கும் சிறந்த, பிரத்யேக சிகிச்சைகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது என்றாா் அவா். திறப்பு விழாவில், மேயா் மு. அன்பழகன் மற்றும் மருத்துவமனை நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அனைவரும் மனிதம் தழைக்க பாடுபடுவோம்: திருச்சி சிவா எம்.பி.

அனைவரும் மனிதம் தழைக்க பாடுபடுவோம் என்றாா் திருச்சி சிவா எம்.பி. திருச்சி இலக்கிய வட்ட நண்பா்கள் சாா்பில் திருச்சி சிவா எம்.பி. பிறந்தநாள் விழா திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திருவா... மேலும் பார்க்க

திருவானைக்காவலில் கா்ண புறா போட்டி

திருவானைக்காவலில் 3 நாள்கள் நடைபெறும் கா்ணபுறா போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இறுதி போட்டி 8-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவானைக்காவல் அன்பா்கள் இணைந்து 4-ஆம் ஆண்டாக புறா போட்டியை நடத்துகிறது. இதில், உ... மேலும் பார்க்க

காமராஜா் நூலகப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு

திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

திருவிழாவை நடத்தக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் நடைபெறவிருந்த பாம்பாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காப்புக் கட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நின்றுபோனது.... மேலும் பார்க்க

மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

முசிறி அருகே, மாங்கரைப்பேட்டையிலுள்ள ஸ்ரீ மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாங்கரைபேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்... மேலும் பார்க்க