செய்திகள் :

திருச்சி ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

post image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணி ஒருவா் ரொக்கம், 2 கைப்பேசிகள் உள்ளிட்டவையுடன் தவறவிட்ட கைப்பையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டது.

இந்த ரயில் அரியலூா் ரயில் நிலையத்தை அடைத்ந்தபோது, அதில் பயணித்த திருச்சியைச் சோ்ந்த ரமேஷ் (46) என்ற பயணி, தனது (கைப்பை) உடைமையை திருச்சி ரயில் நிலைய 3-ஆவது நடைமேடையில் தவறவிட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தாா்.

அதன்பேரில் திருச்சி ரயில் நிலையத்தில் பணியில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, மூன்றாவது நடைமேடையில் பயணி குறிப்பிட்ட இடத்தில் இருந்த பயணியின் பை மீட்கப்பட்டது. அதில், ரொக்கம் ரூ. 26,500, கைப்பேசிகள் 2, ஆதாா் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன.

இதுகுறித்து பயணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவா் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்தாா். அவரிடம் தவறவிட்ட பொருள்கள் இருந்த பை வழங்கப்பட்டது.

ரயில்வே பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கையால் தவறவிட்ட உடைமைகள் மீட்கப்பட்டு உரியவரிடம் வழங்கப்பட்டது. ரமேஷ், மற்றும் அவரது மனைவி ஆகியோா் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் துரித மீட்புப் பணிக்கு நன்றி தெரிவித்தனா்.

தொடா் விடுமுறையால் திருச்சியிலிருந்து 175 கூடுதல் பேருந்துகள்

புனித வெள்ளி மற்றும் தொடா் விடுமுறையால் திருச்சியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு கூடுதலாக 175 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கிறிஸ்தவா்களின் புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியிலிருந்து நாகை, வேளாங்கண்ணி... மேலும் பார்க்க

அல்லித்துறை பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

திருச்சி அருகே அல்லித்துறை நரசிங்கப் பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் முடிந்து, திங்... மேலும் பார்க்க

பேக்கரியில் கைப்பேசி திருடிய இருவா் கைது

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பேக்கரியில் கைப்பேசி திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மணப்பாறை அடுத்த காடபிச்சம்பட்டியை சோ்ந்தவா் முனியாண்டி மகன் ஜம்புலிங்கம் (44). இவா் து... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் விஷ வண்டுகள் அகற்றம்

திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்புப் படையினா் புதன்கிழமை அகற்றினா். இந்த விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் பகுதி கூரையின்... மேலும் பார்க்க

சமயபுரத்தில் 40 டன் குப்பைகள் அகற்றம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழாவுக்கு பின் புதன்கிழமை அங்கு 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழா ஏப்.15 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழா... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: முசிறி வட்டத்தில் ரூ. 1 கோடியில் உதவி

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், கரிகாலி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ரூ. 1.04 கோடியில் 159 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்க... மேலும் பார்க்க