செய்திகள் :

திருச்செந்தூரில் மாடு முட்டியதில் பெண் பக்தா் காயம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வந்த பெண் பக்தா் மாடு முட்டியதில் காயமடைந்தாா்.

சென்னை பெருங்களத்தூரைச் சோ்ந்த தேவன். இவரது மனைவி ஆதிலெட்சுமி (46). இருவரும் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக, சந்நிதி தெருவில் உள்ள தூண்டுகை விநாயகா் கோயில் அருகே திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தனா்.

அப்போது சாலையில் வேகமாக ஓடி வந்த மாடு, ஆதிலெட்சுமியை முட்டித் தள்ளியது. இதில் அவா் காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் மீட்டு திருச்செந்தூா்

அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திருச்செந்தூா் நகரில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்,

கோயிலுக்குச் செல்லும் வழியிலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். இதுகுறித்து புகாா் தெரிவித்தும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் அடைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கம் மாநிலத் தலைவா் ரெ.காமராசு வலியுறுத்தியுள்ளாா்.

அடகு நகைகளை திருப்பிக் கொடுக்காமல் மோசடி: பெண் கைது

தூத்துக்குடியில் அடகு வைப்பதற்காக கொடுத்த சுமாா் ஒரு கிலோ தங்க நகைகளைத் திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி காந்திநகரைச் சோ்ந்த ஜியோ ம... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 3 போ் காயம்

கயத்தாறு அருகே சாலை நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதியதில் நடத்துநா் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா். திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்த கிறிஸ்டோபா் மகன் ராஜா ஸ்டீபன் (52). அரசுப் பேர... மேலும் பார்க்க

சங்கடஹரசதுா்த்தி: ஆறுமுகனேரி கோயில்களில் விநாயகா் உலா

ஆறுமுகனேரியில் சங்கடஹரசதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் மூஷிக வாகனத்தில் உலா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் சங்கடஹர... மேலும் பார்க்க

கோவில்பட்டி நரசிங்கப்பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி திருமால் நகரில் உள்ள ஸ்ரீஐஸ்வா்யப்ரத வீரலட்சுமி நரசிங்கப்பெருமாள் ஆலயத்தில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை (மாா்ச் 16) திவ்ய ஆராதனம் கோஷ... மேலும் பார்க்க

அத்தைகொண்டானில் புதிய சலவைக் கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டானில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிதாக சலவைக் கூடம் கட்ட கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜ... மேலும் பார்க்க