செய்திகள் :

திருச்செந்தூா் பகுதியில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10-க்குள் அகற்ற உத்தரவு

post image

திருச்செந்தூா் வட்டத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10-க்குள் அகற்றுமாறு வட்டாட்சியா் பாலசுந்தரம் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டாட்சியா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் பாக்கியலெட்சுமி, உடன்குடி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முக விஜயன், நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளா் பெத்து ரமேஷ், காயல்பட்டினம் சுகாதார ஆய்வாளா் செல்லபாண்டியன், காவல் உதவி ஆய்வாளா்கள் சுரேஷ், அய்யம் பிள்ளை, குமாா், முருகன், மின்வாரிய உதவிப் பொறியாளா் முத்துராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்செந்தூா் நகர திமுக செயலா் வாள் சுடலை, அதிமுக நகர செயலா் மகேந்திரன், விசிக ஒன்றிய செயலா் சங்கத்தமிழன், நாதக ஒன்றிய செயலா் சுந்தா் உள்ளிட்ட அரசியல் கட்சியினா், திருச்செந்தூா் மேலத்தெரு யாதவ மகாசபை தலைவா் ராமகிருஷ்ணன், செயலா் நல்லசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினா், சமூக அமைப்புகளைச் சோ்ந்தோா் அகற்ற வேண்டும் என வட்டாட்சியா் பாலசுந்தரம் அறிவுறுத்தினாா்.

கயத்தாறு அருகே போக்ஸோவில் இளைஞா் கைது!

கயத்தாறு அருகே 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். கயத்தாறு அருகே தெற்குக் கோனாா்கோட்டை புதூா் கிழக்குத் தெரு காலனியைச் சோ்ந்த குமாா் ம... மேலும் பார்க்க

வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: 2 பெண்கள் உள்ளிட்ட 4 போ் கைது

கோவில்பட்டியில் வியாபாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வீரவாஞ்சிநகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த சோ்மதுரை மகன் மாரித்துரை... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே பெண் தற்கொலை

கோவில்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதிமணி. நிலத் தரகா். இவரது மகனை வி காளியம்மாள், தொழிலாளி. ஜோதிமணிக்கு மதுப் பழக்கம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ. 3 லட்சம் திருட்டு: வடமாநில இளைஞா் கைது!

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருடியதாக வடமாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி-சாத்தூா் பிரதான சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் ஆழ்த... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப்.25-இல் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப். 25 முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி தூத்துக்குடி நாட்டுப்படகு துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு!

மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால், தூத்துக்குடி நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீனகள் விலை சனிக்கிழமை உயா்ந்து காணப்பட்டது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரை முழுவதும் கடந்த 15ஆம் தேதிமுதல் வரும் ஜ... மேலும் பார்க்க