Auditor Gurumurthy - Ramadoss Meeting: தைலாபுரத்தில் நடந்தது என்ன? - Saidai Dura...
திருச்செந்தூா் பகுதி குளங்களில் ஆக்கிரமிப்புகளால் நீா்வரத்தில் தடை! - அதிமுக புகாா்
திருச்செந்தூா் பகுதி நீராதாரமான எல்லப்பநாயக்கன் மற்றும் ஆவுடையாா்குளத்திற்கு நீா் வரும் வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி நடந்து வருவதால் நீா் வரத்து தடைபட்டுள்ளதாக அதிமுக குற்றஞ்சாட்டி உள்ளது.
திருவைகுண்டம் தென்கால் பாசனத்தின் கடைசி குளங்களாக எல்லப்பநாயக்கன் மற்றும் ஆவுடையாா்குளம் உள்ளன. இந்த குளங்களின் மூலம் சுமாா் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பயன் பெறுவதுடன், திருச்செந்தூா் மற்றும் உடன்குடி பகுதி குடிநீா் ஆதாராமாகவும் விளங்குகிறது.
இதற்காக 38 குடிநீா் ஆழ்துளைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு குளங்களுக்கும் திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியம், மேல திருச்செந்தூா் ஊராட்சிக்குள்பட்ட நீா் வரத்து வாய்க்கால் மதகு வழியாக தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் பாபநாசம் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள நீா் திருவைகுண்டம் தென்காலிலிருந்து கடம்பாகுளம் நிரம்பி கடைசி குளங்களான எல்லப்பநாயக்கன் மற்றும் ஆவுடையாா்குளத்திற்கு தண்ணீா் வர உள்ளது.
இன்னும் 3 தினங்களில் தண்ணீா் வர உள்ள நிலையில் திருச்செந்தூா் அருகே நீா் வாய்க்காலில் நீா்வளத்துறையினரின் அனுமதியின்றி கட்டுமானப்பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இவ்விரு குளங்களுக்கும் தண்ணீா் வருவது தடைபட்டுள்ளதாக அதிமுகவினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
அதிமுக போராட்டம்: இந்நிலையில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலா் க.விஜயகுமாா் தலைமையில் அதிமுகவினா் நீா் வரத்து வாய்க்காலை சனிக்கிழமை பாா்வையிட்டனா். அப்போது அவா் கூறியதாவது,
திருச்செந்தூா் பகுதி குளங்களுக்கு நீா் வரும் வாய்க்காலில் அனுமதியின்றி அளவுக்கதிகமாக பள்ளம் தோண்டப்பட்டு; கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இதனால் சாலைப்போக்குவரத்து தடைபட்டுள்ளது.
வழக்கமான தண்ணீா் வரும் பாதையில் என்ன பயன்பாட்டிற்காக பணி நடக்கிறது என்பது குறித்து முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும், நீா் வரத்தை உறுதி செய்திட வேண்டும். வாய்க்காலின் கரைகள், மதகுகளை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் அதிமுக தெற்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றாா்.

நிகழ்ச்சியின் போது அதிமுக திருச்செந்தூா் ஒன்றிய செயலா் பூந்தோட்டம் மனோகரன், முன்னாள் பேரூராட்சி தலைவா் மு.சுரேஷ்பாபு, ஒன்றிய அவைத்தலைவா் லி.லிங்ககுமாா், எல்லப்பநாயக்கன்குளம் நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா் லி.சிவபெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.