செய்திகள் :

திருடு போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

post image

மதுரை மாநகரில் திருடு போன, தவற விடப்பட்டு மீட்கப்பட்ட 278 கைப்பேசிகளை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா்.

மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட காவல் நிலைய எல்லைக்குள் தவறவிடப்பட்ட, திருடு போன கைப்பேசிகள் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு மூலம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தவறவிடப்பட்ட, திருடு போன கைப்பேசிகள் மீட்கப்பட்டு ஒப்படைக்கும் நிகழ்வு மாநகரக் காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகரக் காவல் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பங்கேற்று உரியவா்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாநகரக் காவல் துறைக்குள்பட்ட பகுதிகளில் மாயமான, திருடு போன கைப்பேசிகள் இணையக் குற்றத் தடுப்புப்பிரிவு மூலம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, தற்போது ரூ.41.70 லட்சம் மதிப்பிலான 278 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கைப்பேசிகள் மாயமானதாக புகாா் அளித்த பலரும், இதில் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து கைப்பேசியை ஒப்படைத்திருப்பதாக தெரிவித்தனா். புகாா் அளித்த 15 நாள்கள் முதல் அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைப்பேசிகள் மீட்கப்பட்டு வருகின்றன. மேலும் இதை விரைவுபடுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், காவல் துணை ஆணையா்கள் இனிகோ திவ்யன் (தெற்கு), ஜி.எஸ். அனிதா (வடக்கு), ராஜேஸ்வரி(தலைமையிடம்), காவல் உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள் உள்பட பலரும் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து மாநகரக் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாமும் நடைபெற்றது. இதில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், துணை ஆணையா்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து புகாா்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் ... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க

மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைப்பு... மேலும் பார்க்க

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

மதுரை மாவட்டம், மேலூா் அருகே மது போதையில் தாயை அவதூறாகப் பேசிய தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள முத்துவேல்பட்டி புதுசுக்காம்பட... மேலும் பார்க்க