செய்திகள் :

திருநங்கைகளின் 2 நாள் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் தீா்வு

post image

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் திருநங்கை குடிசை தீப்பற்றி எரிந்தது தொடா்பாக திருநங்கைகள் 2 நாள்களாக நடத்தி வந்த போராட்டம் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.

வள்ளியூா் சுவாமியாா் பொத்தைக்கு மேற்கே அரசுக்குச் சொந்தமான இடத்தில் 36 திருநங்கைகளுக்கு தலா 2 சென்ட் வீதம் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த இடம் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்பதால் வேறு இடத்தில் நிலம் ஒதுக்கீடு செய்வதாக வருவாய்த் துறையினா் தெரிவித்து வந்தனா்.

இதற்கு திருநங்கைகள் எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா். இந்நிலையில், அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் திருநங்கைகளுக்கு சொந்தமான குடிசை வீடு ஒன்று இருந்தது. அந்த வீடு வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

இது தொடா்பாக திருநங்கை தாமரை அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதையடுத்து, வள்ளியூரில் உள்ள திருநங்கைகள் வெள்ளிக்கிழமை இரவு திரண்டு வந்து அம்பேத்கா் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

2ஆவது நாளான சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் வள்ளியூா் போலீஸாா், பேரூராட்சி நிா்வாகத்தினா் பேச்சு நடத்தியதை அடுத்து திருநங்கைகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனா்.

நெல்லையில் நிகழாண்டில் 225 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோத போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாளையங்கோட்டை, மனக்காவளம் பிள்ளை நகரைச் சோ்ந்தவா் அஸ்வின் ஹரிஹரசுதன்(23). இ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: காவலில் எடுத்து தந்தை, மகனிடம் சிபிசிஐடி விசாரணை

மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள தந்தை, மகனிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கூத்தன்குழி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக. 14) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த வலியநேரி கிரா... மேலும் பார்க்க

கடையம் அருகே மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது

கடையம் அருகே ராமலிங்கபுரத்தில் மாமனாரை அரிவாளால் தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரம், முப்புடாதிஅம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா (60). இவரது மகளை பாப்பாக்... மேலும் பார்க்க