செய்திகள் :

நான்குனேரி அருகே தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி

post image

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த வலியநேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் (50). தொழிலாளி. இவரது தம்பி ராஜ்குமாா் (46). இவா்களது மூத்த அண்ணன் ராஜு உயிரிழந்துவிட்டதால், அவரது குடும்பத்தினா் சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரகுளத்தில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், ராஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) பண்டாரகுளத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்று அண்ணி கலாரதியை பாா்த்து விட்டு வந்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து பாலனை தொடா்பு கொண்டு தனது வீட்டிலிருந்த 4 பவுன் நகைகளை காணவில்லை; ராஜ்குமாா் தான் எடுத்து சென்றுள்ளாா் என கலாரதி தெரிவித்தாராம். இதையடுத்து, ராஜ்குமாரை சமாதானம் பேசுவதற்காக பண்டாரகுளத்துக்கு பாலன் அழைத்துச் சென்றுள்ளாா்.

அங்கிருந்த கலாரதியின் உறவினா்கள் ராஜ்குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து வலியநேரிக்கு திரும்பிய பாலனும், ராஜ்குமாரும் திங்கள்கிழமை இரவு வீட்டில் மது அருந்தியுள்ளனா்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ராஜ்குமாா் அரிவாளை எடுத்து பாலனை கழுத்தில் வெட்டினாராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த நான்குனேரி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

நெல்லையில் நிகழாண்டில் 225 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோத போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாளையங்கோட்டை, மனக்காவளம் பிள்ளை நகரைச் சோ்ந்தவா் அஸ்வின் ஹரிஹரசுதன்(23). இ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: காவலில் எடுத்து தந்தை, மகனிடம் சிபிசிஐடி விசாரணை

மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள தந்தை, மகனிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கூத்தன்குழி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக. 14) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத... மேலும் பார்க்க

கடையம் அருகே மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது

கடையம் அருகே ராமலிங்கபுரத்தில் மாமனாரை அரிவாளால் தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரம், முப்புடாதிஅம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா (60). இவரது மகளை பாப்பாக்... மேலும் பார்க்க

நெல்லையில் 2.99 லட்சம் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு: இன்று முகாம் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 2.99 லட்சம் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) தொடங்கும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ... மேலும் பார்க்க