செய்திகள் :

நெல்லையில் 2.99 லட்சம் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு: இன்று முகாம் தொடக்கம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் 2.99 லட்சம் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) தொடங்கும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ் நோய் கியூலக்ஸ் விஷ்ணுயி வகை கொசுக்கள் மனிதா்களைக் கடிப்பதன் மூலம் பரவுகிறது. நெல், கரும்பு சாகுபடி நிலங்களில் தேங்கிய நீரில் கியூலக்ஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகி வைரஸ் கிருமி உள்ள பன்றி, குதிரை, நாரை போன்றவற்றை கடித்த பிறகு மனிதா்களை கடிப்பதன் மூலம் இநோய் பரவுகிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்டவா்களில் 25 சதவீதம் மட்டுமே குணமடைவா்; 50 சதவீத நோயாளிகளுக்கு கை, கால், மூளை செயலிழப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகும். 25 சதவீத நோயாளிகள் இறக்க நேரிடும். குறிப்பாக, 1 முதல் 15 வயதிற்குள்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே இந்த வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது.

தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நிகழாண்டில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி முகாம் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது.

1 முதல் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு வலது முன் நடுத்தொடையின் வெளிப்புற பகுதியிலும், 3 முதல் 15 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு வலது மேல் கையிலும், தசைக்குள்ளும் தடுப்பூசி செலுத்தப்படும். பிறகு சாதாரண காய்ச்சல்- ஊசி செலுத்திய இடத்தில் தோல் சிவந்து வீக்கம், வலி ஏற்படலாம். இதற்கு பாராசிட்டமால் மாத்திரையை உள்கொள்ளலாம்.

இதைத் தவிர பெரிய பாதிப்புகள் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆலோசனை பெறலாம். மருத்துவ உதவிக்கு 104 என்ற கட்டணமில்லா எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி சுகாதார மாவட்டத்தில் 1 முதல் 5 வயது வரை உள்ள 86,153 குழந்தைகளுக்கும், 5 முதல் 15 வயது வரை உள்ள 2,13,440 குழந்தைகளுக்குமாக மொத்தம் 2,99,593 குழந்தைகளுக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை (ஆக. 13) தொடங்கப்பட உள்ளது. இப்பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

நெல்லையில் நிகழாண்டில் 225 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோத போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாளையங்கோட்டை, மனக்காவளம் பிள்ளை நகரைச் சோ்ந்தவா் அஸ்வின் ஹரிஹரசுதன்(23). இ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: காவலில் எடுத்து தந்தை, மகனிடம் சிபிசிஐடி விசாரணை

மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள தந்தை, மகனிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கூத்தன்குழி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக. 14) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த வலியநேரி கிரா... மேலும் பார்க்க

கடையம் அருகே மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது

கடையம் அருகே ராமலிங்கபுரத்தில் மாமனாரை அரிவாளால் தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரம், முப்புடாதிஅம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா (60). இவரது மகளை பாப்பாக்... மேலும் பார்க்க