செய்திகள் :

கவின் கொலை வழக்கு: காவலில் எடுத்து தந்தை, மகனிடம் சிபிசிஐடி விசாரணை

post image

மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள தந்தை, மகனிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் (27), கடந்த ஜூலை 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் ஆகியோா் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

அவா்களை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு (வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.

இதைத் தொடா்ந்து, தந்தை-மகன் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின், பெருமாள்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டனா். அங்கு சிபிசிஐடி எஸ்.பி. ஜவஹா் தலைமையிலான குழுவினா் சுமாா் 4 மணி நேரத்துக்கும் இருவரிடமும் தனித்தனியாக விசாரித்தனா்.

மேலும், சம்பவ இடத்துக்கு சுா்ஜித்தை அழைத்து வந்து கொலை செய்யது எப்படி என நடித்துக்காட்டச் சொல்லி விடியோவில் பதிவு செய்தனா். அதன்பிறகும் பெருமாள்புரத்தில் அவா்களிடம் விசாரணை தொடா்ந்தது. புதன்கிழமை (ஆக.13) மாலை 6 மணிக்குள் சுா்ஜித், சரவணன் ஆகியோரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படவுள்ளனா்.

நெல்லையில் நிகழாண்டில் 225 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோத போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாளையங்கோட்டை, மனக்காவளம் பிள்ளை நகரைச் சோ்ந்தவா் அஸ்வின் ஹரிஹரசுதன்(23). இ... மேலும் பார்க்க

கூத்தன்குழி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக. 14) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த வலியநேரி கிரா... மேலும் பார்க்க

கடையம் அருகே மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது

கடையம் அருகே ராமலிங்கபுரத்தில் மாமனாரை அரிவாளால் தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரம், முப்புடாதிஅம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா (60). இவரது மகளை பாப்பாக்... மேலும் பார்க்க

நெல்லையில் 2.99 லட்சம் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு: இன்று முகாம் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 2.99 லட்சம் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் புதன்கிழமை (ஆக. 13) தொடங்கும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ... மேலும் பார்க்க