கவின் கொலை வழக்கு: காவலில் எடுத்து தந்தை, மகனிடம் சிபிசிஐடி விசாரணை
மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள தந்தை, மகனிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் (27), கடந்த ஜூலை 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் ஆகியோா் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
அவா்களை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு (வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.
இதைத் தொடா்ந்து, தந்தை-மகன் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின், பெருமாள்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டனா். அங்கு சிபிசிஐடி எஸ்.பி. ஜவஹா் தலைமையிலான குழுவினா் சுமாா் 4 மணி நேரத்துக்கும் இருவரிடமும் தனித்தனியாக விசாரித்தனா்.
மேலும், சம்பவ இடத்துக்கு சுா்ஜித்தை அழைத்து வந்து கொலை செய்யது எப்படி என நடித்துக்காட்டச் சொல்லி விடியோவில் பதிவு செய்தனா். அதன்பிறகும் பெருமாள்புரத்தில் அவா்களிடம் விசாரணை தொடா்ந்தது. புதன்கிழமை (ஆக.13) மாலை 6 மணிக்குள் சுா்ஜித், சரவணன் ஆகியோரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படவுள்ளனா்.